காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் ஏன் தாமதம்? 35 ஆண்டுகளுக்கு முன் ராஜ்யசபாவில் பேசிய ஜெ.
டெல்லி: 1984-ம் ஆண்டு ராஜ்யசபாவில் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பினார். இன்று மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒரு அங்கமாக்கி இருக்கிறது.
1984-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி ராஜ்யசபாவில் ஜெயலலிதா உரையாற்றினார். காஷ்மீர் விவகாரம் குறித்து ஜெயலலிதா அன்று பேசியதாவது:

அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவுக்கு அதிமுகவும் பலியாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லா அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளை 356-வது பிரிவின் கீழ் கலைப்பது புதியதும் அல்ல... இதுவே கடைசியுமானதும் அல்ல.
இந்திய அர்சியல் சாசனத்தில் 356-வது பிரிவு தொடர்ந்து நீடிக்கத்தான் போகிறது. உள்துறை அமைச்சருக்கு 2 கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
1) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? 2) ஜம்மு காஷ்மீரை இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியாக, பிற மாநிலங்களைப் போல இந்திய அரசியல் சாசனத்தின் கீழான ஒரு மாநிலமாக கொண்டுவருவதில் ஏன் தாமதம்?
இவ்வாறு ஜெயலலிதா 35 ஆண்டுகளுக்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்ததுடன் அம்மாநிலத்தையே 2 யூனியன் பிரதேசங்களாக துண்டாடி இருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ராஜ்யசபாவில் அதிமுக முழு ஆதரவையும் தற்போது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications