டெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா
டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணியின் போது 394 போலீசார் படுகாயமடைந்துள்ளதாகவும் பலர் மிகவும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணி பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. பல இடங்களில் போலீசாருடன் மோதல், தடியடிகள், கண்ணீர்புகை குண்டு வீச்சுகள் என டெல்லி மாநகரமே போர்க்களமானது.
விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் சதிநோக்கத்துடன் சிலர் ஊடுருவி இத்தகைய மோதல்களை அரங்கேற்றியதும் அம்பலமாகி உள்ளது. இந்த நிலையில் டெல்லி சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போலீஸ்- விவசாயிகள் பேச்சு
விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த பகல் 12 மணி முதல் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு எழுத்துப்பூர்வமாகவும் அனுமதி தரப்பட்டது. விவசாயிகள் தரப்பிலும் 5,000 டிராக்டர்கள் மட்டும் பேரணியில் பங்கேற்கும்; ஆயுதங்கள் கொண்டுவரமாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது.

வன்முறை பேச்சுகள்
ஆனால் ஜனவரி 25-ந் தேதி மாலையே விவசாயிகள் அளித்த வாக்குறுதிகளை மீற தொடங்கினர். தீவிரவாத சக்திகளை மேடையில் ஏற்றி தூண்டிவிடும் வகையில் அவர்கள் பேசினர். அவர்களது வன்முறை நோக்கம் மிக தெளிவாகவே இருந்தது. சத்னாம் சிங் பன்னுவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. காசிப்பூர் பகுதியில் தர்ஷன் பால்சிங் ஆதரவாளர்கள் காலை 8.30 மணிக்கே தடையை மீறி பேரணியை தொடங்கினர்.

394 போலீசார் படுகாயம்
ஜனவரி 26-ந் தேதி நடத்தப்பட்ட விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணியில் மொத்தம் 394 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் மிகவும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி போலீசாரால் இதுவரை 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

19 பேர் கைது- 50 பேரிடம் விசாரணை
சிசிடிவி காட்சிகள் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகிறோம். குற்றச்செயல்கள், வன்முறைகளில் ஈடுபட்ட யாரும் தப்பிவிட முடியாது. இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
|
வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை
டிராக்டர்கள் பேரணியை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பினோம். விவசாய சங்க தலைவர்கள் பலரும் வாக்குறுதிகளை மீறி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி விவசாயிகள் பேரணியில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும். டெல்லி போலீசாருக்கு விவசாய சங்கத் தலைவர்கள் துரோகம் செய்துவிட்டனர். காசிப்பூர் பகுதியில் ராகேஷ் திகாயத் ஆதரவாளர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். போலீசாருக்கு வேறுவழியே இல்லாமல்தான் அவர்களைத் தடுத்தனர். இவ்வாறு ஶ்ரீவத்சவா கூறினார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications