உ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர் பரிதாப பலி
டெல்லி: உத்தரப்பிரதேசம், பீகாரில் மீண்டும் இடி மின்னல் தாக்கியதில் 43 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நாடு முழுவதும் பருவமழை காலம் ஒருபுறம் தீவிரமாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் இன்னமும் அனலின் தாக்கம் குறைந்ததாகவும் இல்லை.
மகாராஷ்டிராவில் கனமழை கொட்டியதால் பல இடங்கள் வெள்ளத்தால் மிதந்தன. கனமழையால் சுவர்கள் இடிந்து விழுந்தன. மும்பையில் சனிக்கிழமையன்றும் கனமழை கொட்டியது.

அதிகமான வெப்பநிலை
அதேநேரத்தில் பஞ்சாப், ஹரியானாவில் வழக்கத்தைவிட கூடுதல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. டெல்லியில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இருப்பினும் டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டமாகவும் லேசாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உ.பி.யில் இடிமின்னல்- 23 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் கனமழை கொட்டியது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இடி, மின்னல் மழைக்கு 23 பேர் பரிதாபமாக பலியாகினர். 29 பேர் படுகாயமடைந்தனர். அதிகபட்சமாக அலகாபாத்தில் 8 பேர் மரணமடைந்திருக்கின்றனர். இதேபோல் பீகாரில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

பீகாரில் இடிதாக்கி 20 பேர் மரணம்
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்தனர். பீகாரின் போஜ்பூரில்தான் அதிகபட்சமாக 9 பேர் பலியாகி உள்ளனர். பாட்னாவில் 2 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். மொத்தமாக சனிக்கிழமையன்று பீகார், உ.பி.யில் இடி மின்னல்தாக்கி மொத்தம் 43 பேர் பலியாகினர்.

வட இந்தியாவுக்கு எச்சரிக்கை
தற்போதைய பருவமழை காலத்தில் பீகார், உத்தரப்பிரதேசத்தில் இடிமின்னல் தாக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications