உ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர் பரிதாப பலி
டெல்லி: உத்தரப்பிரதேசம், பீகாரில் மீண்டும் இடி மின்னல் தாக்கியதில் 43 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நாடு முழுவதும் பருவமழை காலம் ஒருபுறம் தீவிரமாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் இன்னமும் அனலின் தாக்கம் குறைந்ததாகவும் இல்லை.
மகாராஷ்டிராவில் கனமழை கொட்டியதால் பல இடங்கள் வெள்ளத்தால் மிதந்தன. கனமழையால் சுவர்கள் இடிந்து விழுந்தன. மும்பையில் சனிக்கிழமையன்றும் கனமழை கொட்டியது.

அதிகமான வெப்பநிலை
அதேநேரத்தில் பஞ்சாப், ஹரியானாவில் வழக்கத்தைவிட கூடுதல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. டெல்லியில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இருப்பினும் டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டமாகவும் லேசாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உ.பி.யில் இடிமின்னல்- 23 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் கனமழை கொட்டியது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இடி, மின்னல் மழைக்கு 23 பேர் பரிதாபமாக பலியாகினர். 29 பேர் படுகாயமடைந்தனர். அதிகபட்சமாக அலகாபாத்தில் 8 பேர் மரணமடைந்திருக்கின்றனர். இதேபோல் பீகாரில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

பீகாரில் இடிதாக்கி 20 பேர் மரணம்
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்தனர். பீகாரின் போஜ்பூரில்தான் அதிகபட்சமாக 9 பேர் பலியாகி உள்ளனர். பாட்னாவில் 2 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். மொத்தமாக சனிக்கிழமையன்று பீகார், உ.பி.யில் இடி மின்னல்தாக்கி மொத்தம் 43 பேர் பலியாகினர்.

வட இந்தியாவுக்கு எச்சரிக்கை
தற்போதைய பருவமழை காலத்தில் பீகார், உத்தரப்பிரதேசத்தில் இடிமின்னல் தாக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications