5 கிலோ உணவு தானியம் இலவசம்... 80 கோடி மக்களுக்கு கொரோனா நிவாரணம் அறிவித்த மோடி
நாடு முழுவதும் மே, ஜூன் மாதங்களில் 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் மோடி கூறியுள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களில் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக ரூ. 26000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரியும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சம் பேர் வரை கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார் மோடி.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக 26000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மோடி.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications