லிபியாவில் 7 இந்தியர்கள் கடத்தல்... அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சவார்த்தை!
டெல்லி: இந்தியாவுக்கு வருவதற்காக லிபியாவின் திரிபோலி விமான நிலையத்துக்கு வரும் வழியில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
லிபியாவின் அஷ்வெரிப் என்ற இடத்தில் இருந்து திரிபோலியில் இருக்கும் விமான நிலையத்துக்கு கடந்த மாதம் ஏழு இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது, இவர்கள் கடத்தப்பட்டனர். இவர்கள் ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்களது உறவினர்கள் மீட்கப்பட்டு விடுவார்கள் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளோம். அவர்களை கடத்தல்காரர்களிடம் இருந்து விடுவிப்பதற்கு லிபியா அரசிடம் பேசி வருகிறோம். கடத்தப்பட்டவர்கள் அனைவரும் அங்கு கட்டிட மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர்.
கடத்தல்காரர்களிடம் அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களது புகைப்படத்தை காட்டி பத்திரமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். அவர்களை நல்லபடியாக நடத்துவதாகவும் உத்திரவாதம் அளித்துள்ளனர். துனிஷியாவில் இருக்கும் இந்திய தூதரகம் லிபியா அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது. மேலும் சர்வதேச அமைப்புகளுடனும் அவர்களை விடுவிக்க பேசி வருகிறது'' என்றார்.
லிபியாவில் 2011ல் முகம்மது கடாபியின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் அங்கு வன்முறை பெரிய அளவில் நடந்து வருகிறது. லிபியாவில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், அங்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டு என்று 2015, செப்டம்பரில் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, 2016ஆம் ஆண்டில் கண்டிப்பாக யாரும் லிபியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்து இருந்தது. இன்னும் அந்த தடை அமலில் இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications