Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75-வது சுதந்திர தினம்.. ஆகஸ்ட் முதல் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொடி, பொதுமக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேரும் வகையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அனைத்து தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் 'ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்' என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு 'ஹர் கார் திரங்கா' (வீடுதோறும் மூவர்ணக்கொடி) என்ற இயக்கத்தை அறிவித்தது. இதன்படி, ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 75th Independence Day: Sale of National flag at post offices from August 1

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள 'ஹர் கார் திரங்கா' என்ற வீடுதோறும் மூவர்ணம் இயக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பான 75 நாள் பிரசாரம் குறித்து, மத்திய அரசின் கலாசாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியவதாவது : நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் உலகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வாக, 'ஹர் கார் திரங்கா' (வீடு தோறும் மூவர்ணம்) நடத்தப்பட உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், அதிக அளவில் கொடி வினியோகம் செய்யும் நிறுவனங்களை மத்திய ஜவுளித் துறை கண்டறிந்துள்ளது.

ஆகஸ்ட் 1-ந் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். இந்தியாவில் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது. கொரோனாவை எப்படி வெற்றிகொள்ள முடியும்? என்பதை பிரசாரமாக செய்து வருகிறோம் என்று மத்திய கலாசாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நமது தேசியக்கொடியை, சூரிய உதயத்தில் இருந்து பறக்க விடலாம், சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும் என்பதுதான் சட்ட நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டதால், வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்திரத்தால் செய்த தேசியக்கொடிக்கும், பாலியஸ்டர் தேசியக்கொடிக்கும் அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+