இந்தியாவில் மொத்தம் 96.88 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்! உலகிலேயே இந்த பெருமை நமக்குத்தான்
டெல்லி: இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 49.72 கோடி; பெண் வாக்காளர்கள் 47.15 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 48 ஆயிரத்து 44 பேர் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தவர்களை விட வரும் லோக்சபா தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதாவது, கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, இந்தியாவில் 89.6 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை, சுமார் 7 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

மேலும், புதிதாக பதிவு செய்துள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முதல் முறையாக வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 88 லட்சத்துக்கு 35 ஆயிரம் பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications