தாஜ்மஹால் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு.. சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தாஜ்மஹால் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
டெல்லியில் ஆக்ரா நகரில் உள்ளது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால். இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

உள்நாட்டு பயணிகள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்துமிடத்தில் 9 அடி நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதை கண்ட மக்கள் அச்சமடைந்தனர்.
பின்னர் வாகனங்களை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மலைப்பாம்பை மீட்க வனத்துறை அதிகாரிகள் தாஜ்மஹாலுக்கு விரைந்து அதை பிடித்து சென்றனர்.












Click it and Unblock the Notifications