Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. பாஜக ஆட்சியில் 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர்கள்.. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர்கள் போலீசாரால் நிகழ்த்தப்பட்டுள்ளது தொடர்பாக வல்லுநர் குழு விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் என்கவுண்ட்டர்கள் சகஜமான ஒன்றாகிவிட்டது. அம்மாநில அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பலரும் என்கவுண்ட்டரால் சுட்டுக் கொல்லப்படுவது இயல்பாகிவிட்டது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 183 என்கவுண்ட்டர்கள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

A Plea In Supreme Court Seeks Inquiry Into 183 Police Encounters In UP

குறிப்பாக கடந்த 2 மாதங்களில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் மட்டும் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் எம்பி அத்திக் அகமது, அவரது மகன் ஆசாத் அகமது, அத்திக் சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோரின் மரணம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஆசாத் அகமது உள்ளிட்ட 2 பேரை போலீசார் ஜான்சி நகரில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அத்திக் அகமது, அஷ்ரப் அகமது இருவரும் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்துத்துவா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் உ.பி.யில் கடந்த 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த என்கவுண்ட்டர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+