ஜாமியா பல்கலை. துப்பாக்கி சூடு...ரூ10,000க்கு துப்பாக்கி விற்ற உ.பி. ஆசிரியர் சிக்கினார்
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிதாரிக்கு ரூ10,000-க்கு துப்பாக்கி விற்ற நபர் சிக்கியுள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழகம், ஷாகீன் பாக் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவதால் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் ஜாமியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது அம்பலமானது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது ஆசிரியர் ஒருவர் ரூ10,000க்கு நாட்டு துப்பாக்கியை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரை தற்போது போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications