Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசுக்கு எதிராக.. கெஜ்ரிவால் பெரியமூவ்! கூட்டத்தில் பங்கேற்ற பல ஆயிரம் பேர்! குலுங்கிய டெல்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவர்களின் செயல்பாடுகளை கண்டித்தும் இன்று டெல்லியில் ஆம்ஆத்மி சார்பில் மிகப்பெரிய அளவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டதால் டெல்லி குலுங்கியது.

டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் செய்ய டெல்லி அரசுக்கு அனுமதி இருப்பதாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

Aam Aadmi Arvind Kejriwal maha rally today against Centres ordinance, Over 1 laks people may partcipate

இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்துக்கு திருத்தத்துக்கு கட்சிகள் ஆதரவு வழங்க கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களை கெஜ்ரிவால் சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் ‛‛இந்த விஷயத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த சட்ட திருத்தம் என்பது நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிவிடும். ஏனென்றால் அங்கு பாஜகவுக்கு மெஜாரிட்டி உள்ளது. ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. இதனால் அங்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட வேண்டும்'' என கூறி வருகிறார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று மத்திய அரசின் செயலை கண்டித்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் மிகப்பெரிய அளவில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆம்ஆத்மி கட்சியினர் சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளனர்.

இந்த பொதுக்கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மதியம் 12 மணிக்கு துவங்கி நடைபெற்றது.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை சுற்றி 12 கம்பெனி பாரா மிலிட்டரி வீரர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக இந்த பொதுக்கூட்டம் பற்றி நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛டெல்லி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார சட்டத்திற்கு எதிராக நாளை (அதாவது இன்று)டெல்லி மக்கள் ஒன்றுகூடி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவார்கள். அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள்'' என்றார். இந்த ட்வீட் மூலம் தனது கூட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+