Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறந்த உத்தரவு.. டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த திடீர் தடை.. என்ன காரணம்?

டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை விதித்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது... மேலும் ஒலி பெருக்கிகள், முழக்கங்கள் மூலம் ஒலி எழுப்பவும் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் கடந்த சனிக்கிழமையன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்... பணியாளர் பற்றாக்குறை உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

ஆனால், பிரதான ஆபரேஷன் தியேட்டரில், பணியாளர் பற்றாக்குறை குறித்து செவிலியர்கள் குழு நடத்திய போராட்டத்தின் விளைவாக, கிட்டத்தட்ட 50 திட்டமிடப்பட்ட ஆபரேஷன்கள் ரத்து செய்யப்பட்டன...

 நர்ஸ்கள்

நர்ஸ்கள்

எனவே, நர்ஸ்கள் குழு நடத்திய இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும், டாக்டர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் செவிலியர் சங்கத்தின் தலைவருமான ஹரிஷ் குமார் கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்... ஹரிஷ் கஜ்லா இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து செவிலியர்கள் அனைவரும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

 உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்


அந்த வகையில், இன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.. செவிலியர் சங்கத் தலைவரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனக் கூறியும் செவிலியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.. மேலும் ஊதிய உயர்வு, போதிய அளவு பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்..

 திடீர் ஆர்ப்பாட்டம்

திடீர் ஆர்ப்பாட்டம்

இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பரபரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கடந்த சில நாட்களுக்கு முன்பே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி எழுப்பும் தடை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

 ஒலிபெருக்கி

ஒலிபெருக்கி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உள்பட யாருக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அத்துடன், இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+