பறந்த உத்தரவு.. டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த திடீர் தடை.. என்ன காரணம்?
டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை விதித்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது... மேலும் ஒலி பெருக்கிகள், முழக்கங்கள் மூலம் ஒலி எழுப்பவும் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் கடந்த சனிக்கிழமையன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்... பணியாளர் பற்றாக்குறை உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
ஆனால், பிரதான ஆபரேஷன் தியேட்டரில், பணியாளர் பற்றாக்குறை குறித்து செவிலியர்கள் குழு நடத்திய போராட்டத்தின் விளைவாக, கிட்டத்தட்ட 50 திட்டமிடப்பட்ட ஆபரேஷன்கள் ரத்து செய்யப்பட்டன...

நர்ஸ்கள்
எனவே, நர்ஸ்கள் குழு நடத்திய இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும், டாக்டர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் செவிலியர் சங்கத்தின் தலைவருமான ஹரிஷ் குமார் கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்... ஹரிஷ் கஜ்லா இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து செவிலியர்கள் அனைவரும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

உள்ளிருப்பு போராட்டம்
அந்த வகையில், இன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.. செவிலியர் சங்கத் தலைவரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனக் கூறியும் செவிலியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.. மேலும் ஊதிய உயர்வு, போதிய அளவு பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்..

திடீர் ஆர்ப்பாட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பரபரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கடந்த சில நாட்களுக்கு முன்பே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி எழுப்பும் தடை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

ஒலிபெருக்கி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உள்பட யாருக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அத்துடன், இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications