7 பேருடன் டெல்லி புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது.. வனப்பகுதியில் மீட்பு பணி தீவிரம்!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில், ஏழு பேர் பயணம் செய்த விமான ஆம்புலன்ஸ் இன்று விபத்துக்குள்ளானது. டெல்லிக்கு புறப்பட்ட நிலையில் டேக் ஆஃப் ஆன 35-வது நிமிடத்தில் ரேடார் தொடர்பு, விமானத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதில் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. ரெட் பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பீச்ராஃப்ட் C90 ரக விமானம் இது என விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA தெரிவித்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து 7 பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்ட 35 வது நிமிடத்தில் ரேடாரில் இருந்து மாயமானது. இதனையடுத்து விமானத்தை தொடர்பு கொள்ள நடைபெற்ற முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை.

சற்று நேரத்தில் விமானம் ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்தது. இந்த கோர விபத்தில் ஒருவர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்ட 41 வயதான சஞ்சய்குமார் என்பவர் பலியாகியுள்ளார்.
இந்த ஏர் ஆம்புலன்ஸில் ஒரு நோயாளி, ஒரு மருத்துவர், ஒரு பாராமெடிக், இரண்டு உதவியாளர்கள், ஒரு பைலட் மற்றும் கோ பைலட் என 7 பேர் பயணம் செய்துள்ளனர். சத்ராவில் உள்ள வனப்பகுதியில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது. ரெட்பேர்டு ஏர்வேஸ் என்ற நிறுவனம் இயக்கி வந்த eechcraft C90 என்ற சிறிய ரக விமானம், ராஞ்சியில் 7.11 மணிக்கு புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்துள்ளது. மீட்புக்குழு நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளது. விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் விசாரணைக்கு விரைந்துள்ளனர். விரைவில் கூடுதல் விவரங்கள் பகிரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications