மெல்லிய பூங்காற்று... தலைநகரில் ஓராண்டுக்குப் பின் வீசும் தூய காற்று
டெல்லி: தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் காற்று மாசு குறைந்து சற்று தூய்மையான காற்று வீசுகிறது.
பருவ நிலை மாற்றத்தால் பூமியின் நிலப்பகுதி மிக அதிகப்படியான வெப்பம் அடைவதால் காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் விவசாயம் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் பொய்த்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, கால மாற்றம், உணவு முறை போன்ற காரணங்களால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 65 வயதாக மாறிவிட்டதாக கூறப்படும் நிலையில், தலைநகர் டெல்லியில், காற்று மாசு அளவுக்க அதிகமாக இருந்தது. அச்சம் கொள்ள வைத்த இந்த காற்று மாசு தற்போது மாறி வருகிறது.
காற்றின் தர அட்டவணையின் படி பூஜ்ஜியத்தில் இருந்து 500 புள்ளிகள் வரை மிக தீவிரம், மோசம், திருப்திகரம், தூய்மை என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. டெல்லியில் கடந்த 24-ம் தேதி 164 ஆக இருந்த காற்று மாசு புள்ளிகள் கடந்த 25-ம் தேதிக்குப் பின் மழை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி 50 முதல் 100 புள்ளிகளுக்குள் மாறி மாறியே கடந்த 5 நாட்களாக நிலவி வருகிறது. நேற்று 65 புள்ளிகளாகக் குறைந்தது.
இதையடுத்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் டெல்லியில் காற்று மாசு குறைந்து சற்று தூய காற்று வீசுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மேலும் மாசு குறைந்து காற்று தூய்மையடையும் என குறிப்பிட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications