ஐயோ போச்சே.. துருக்கி - அஜர்பைஜானுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. GJC வெளியிட்ட மேஜர் அறிவிப்பு
டெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு எதிராக அகில இந்திய ரத்தினம் மற்றும் நகை கவுன்சில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. துருக்கி மற்றும் அஜர்பைஜான் இடையேயான அனைத்து வர்த்தக உறவுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துருக்கி, அஜர்பைஜானில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். அதேபோல் நம் நாட்டின் சுற்றுலா பயணிகளும் இருநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க தொடங்கி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு துருக்கி, அஜர்பைஜானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த உள்ளது.
நம் நாட்டு மக்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாட்டுக்கு எதிராக திரும்பி உள்ளனர். இருநாடுகளும் சுற்றுலா துறைக்கு மிகவும் பெயர் பெற்றவை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் இருந்து துருக்கி, அஜர்பைஜானுக்கு ஏராளமான மக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர். ஆனால் இப்போது இருநாடுகளுக்கும் மக்கள் சுற்றுலா செல்ல போட்ட திட்டத்தை கேன்சல் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது தான். நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலின்போது துருக்கி,அஜர்பைஜான் ஆகியவை நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தன. அதோடு பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்த நம் நாட்டை கண்டித்தன.
இதனால் துருக்கி, அஜர்பைஜானுக்கு பாடம் புகட்டும் நோக்கில் மக்கள் அந்த நாடுகளை புறக்கணித்து வருகின்றனர். அதேபோல் புனே வியாபாரிகள் சங்கம் துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை ரத்து செய்துள்ளன. அதேபோல் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மார்பிள் கல் தொடர்பான வர்த்தகத்தை கைவிடுவதாக உதய்ப்பூர் மார்பிள் புராசசர்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது. அந்த வரிசையில் இப்போது இணைந்து இருப்பது தான் சிஜேசி எனும் அகில இந்திய ரத்தினம் மற்றும் நகைக்கான உள்நாட்டு கவுன்சில் ( CJC அல்லது All India Gem and Jewellery Domestic Council).
அதாவது துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் உள்ள வர்த்தக தொடர்பை உடனடியாக கைவிட வேண்டும் என்று அகில இந்திய ரத்தினம் மற்றும் உள்நாட்டு கவுன்சில் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் தலைவர் கூறியதாவது: "இந்திய ரத்தினம் மற்றும் நகைத் துறை நம் நாட்டுடன் ஒன்றுபட்டு நிற்க முடிவு எடுத்துள்ளது. வர்த்தகத்தை விட நாட்டின் பாதுகாப்பு, நலன் தான் முக்கியம். இதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் முன்மாதிரி அமைப்பாக இருக்க முடியும். இதனால் துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் அனைத்து வர்த்தக தொடர்பையும் நிறுத்தும்படி நகைக்கடைக்காரர்கள், நகை உற்பத்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதை செய்வதன் மூலம் துருக்கி, அஜர்பைஜானுக்கு நம்மால் முக்கிய செய்தியை அனுப்ப முடியும். இந்திய நாட்டின் தூணாக இருக்கும் தொழில்துறை இருநாடுகளுக்கு எதிரான ஒற்றுமையை வலுப்படுத்துவதை காட்ட முடியும். இதனால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்காக நாம் ஒன்றாக இணைந்து நிற்போம்'' என்று கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications