51 ஆண்டுகளாக காங்கிரஸில் இருக்கிறேன்- என்னை அவமானப்படுத்திட்டீங்களே... குமுறும் சீனியர் ஆனந்த் சர்மா
டெல்லி: இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா திடீரென ராஜினாமா செய்துள்ளார். தாம் காங்கிரஸில் 51 ஆண்டுகள் இருந்த போதும் சீனியர் என்ற முறையில் தம்மிடம் எதையுமே ஆலோசிக்காமல் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும்; கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களின் நீண்டகால கோரிக்கை. இதனை வலியுறுத்தி கட்சித் தலைமைக்கு 23 சீனியர் தலைவர்கள் கடிதம் அனுப்பி இருந்தனர். குலாம் நபி ஆசாத், மணீஷ் திவாரி உள்ளிட்ட 23 பேர் இக்கடிதத்தை அனுப்பினர். காங்கிரஸ் தலைமைக்கு எதிரான இந்த கலகக் குரல் எழுப்பியவர்கள் ஜி 23 தலைவர்கள் என அழைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை காங்கிரஸ் மேலிடம் முடுக்கிவிட்டிருந்தது. அப்போது குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களையும் காங்கிரஸ் மேலிடம் அழைத்து ஆலோசனை நடத்தியது. மேலும் இமாச்சல் பிரதேச வழிகாட்டுத் தலைவர் பதவியில் ஆனந்த் சர்மாவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் காங்கிரஸில் மீண்டும் கலகக் குரல் வெடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அண்மையில் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்து இப்பதவியை குலாம்நபி ஆசாத் ராஜினாமா செய்தார். இதே பாணியில் தற்போது இமாச்சல் பிரதேச வழிகாட்டுத் குழுத் தலைவர் பதவியில் இருந்து மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ராஜினாமா செய்திருக்கிறார். இது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இமாச்சல பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள ந்லையில் ஆனந்த் சர்மாவின் இம்முடிவால் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆனந்த் சர்மா வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தேன். இமாச்சல பிரதேசத்தில் நான் சீனியர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர். காங்கிரஸ் செயற்குழுவின் அரசியல் விவகாரங்களுக்கான குழுவிலும் இடம்பெற்றுள்ளேன். ஆனால் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்பான எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தையும் என்னை அழைப்பதே கிடையாது. இம்மாநிலத்துக்கு பூபேஷ் பாகல் மேலிடப் பார்வையாளராக வருகிறார். ஆனால் என்னை அழைக்கவே மறுக்கிறார்கள். இது என்னை அவமானப்படுத்துவதாகவே இருக்கிறது. எனக்கு என்னுடைய சுயமரியாதை மிக முக்கியமாகும். இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications