நள்ளிரவில்.. போனை போட்டு பிரதமர் மோடி கேட்ட கேள்வி.. "செம சார்.." அமைச்சர் ஜெய்சங்கர் நெகிழ்ச்சி!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் நடைபெற்ற பிறகு நள்ளிரவில் பிரதமர் மோடி போன் செய்து அங்குள்ள சூழல்களை விசாரித்ததாகவும் அப்போது முதலில், 'நீங்கள் வீழித்து இருக்கிறீர்களா' என்று பேசியதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானின் மசர் இ ஷரிப் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது நள்ளிரவை தாண்டி தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் நடைபெற்றதும் அங்கு என்ன நடைபெற்றது என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்து கொண்டிருந்தோம். எனது போனில் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.

அப்போது, நள்ளிரவில் திடீரென பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதல் கேள்வியாக விழித்து இருக்கிறீர்களா? எனக்கேட்டார். அதைத்தொடர்ந்து அங்குள்ள சூழல் குறித்தும் உதவிகள் செய்வது குறித்தும் நான் பிரதமரிடம் தெரிவித்தேன். மீட்பு மற்றும் உதவிகள் முடிந்த பிறகு மீண்டும் அழைக்குமாறு கூறினார். இதற்கு நான், அனைத்து பணிகளும் முடிவடைய 2 முதல் 3 மணி நேரம் ஆகும் என்று கூறினேன்.
மேலும் பிரதமர் அலுவலகத்தில் கூறிவிடுவதாகவும் தெரிவித்தேன். ஆனால், பிரதமர் மோடி, எனக்கு போன் செய்யுங்கள்'' என்றார். தேவைப்படும் நேரத்தில் பிரதமர் மோடி பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாகவும் பாராட்டிய ஜெய்சங்கர், கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் இந்தியா எப்படி முக்கியமான முடிவுகளை எடுக்க முடிந்தது என்பது குறித்தும் பேசினார்.
அதேபோல், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்ற போது நடைபெற்ற மீட்பு பணிகள் குறித்தும் ஜெய்சங்கர் பேசினார். ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications