நள்ளிரவில்.. போனை போட்டு பிரதமர் மோடி கேட்ட கேள்வி.. "செம சார்.." அமைச்சர் ஜெய்சங்கர் நெகிழ்ச்சி!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் நடைபெற்ற பிறகு நள்ளிரவில் பிரதமர் மோடி போன் செய்து அங்குள்ள சூழல்களை விசாரித்ததாகவும் அப்போது முதலில், 'நீங்கள் வீழித்து இருக்கிறீர்களா' என்று பேசியதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானின் மசர் இ ஷரிப் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது நள்ளிரவை தாண்டி தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் நடைபெற்றதும் அங்கு என்ன நடைபெற்றது என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்து கொண்டிருந்தோம். எனது போனில் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.

அப்போது, நள்ளிரவில் திடீரென பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதல் கேள்வியாக விழித்து இருக்கிறீர்களா? எனக்கேட்டார். அதைத்தொடர்ந்து அங்குள்ள சூழல் குறித்தும் உதவிகள் செய்வது குறித்தும் நான் பிரதமரிடம் தெரிவித்தேன். மீட்பு மற்றும் உதவிகள் முடிந்த பிறகு மீண்டும் அழைக்குமாறு கூறினார். இதற்கு நான், அனைத்து பணிகளும் முடிவடைய 2 முதல் 3 மணி நேரம் ஆகும் என்று கூறினேன்.
மேலும் பிரதமர் அலுவலகத்தில் கூறிவிடுவதாகவும் தெரிவித்தேன். ஆனால், பிரதமர் மோடி, எனக்கு போன் செய்யுங்கள்'' என்றார். தேவைப்படும் நேரத்தில் பிரதமர் மோடி பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாகவும் பாராட்டிய ஜெய்சங்கர், கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் இந்தியா எப்படி முக்கியமான முடிவுகளை எடுக்க முடிந்தது என்பது குறித்தும் பேசினார்.
அதேபோல், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்ற போது நடைபெற்ற மீட்பு பணிகள் குறித்தும் ஜெய்சங்கர் பேசினார். ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications