‛மோடி என கோஷமிடும் கணவருக்கு உணவு கொடுக்காதீங்க’.. பெண்களிடம் கூறிய கெஜ்ரிவால்! கிளம்பிய விவாதம்
டெல்லி: ‛‛இப்போது பெரும்பலாான ஆண்கள் மோடி என கோஷமிடுகின்றனர். இப்படி கோஷமிடும் கணவருக்கு இரவு உணவு வழங்காதீர்கள்'' என ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஆம்ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்கிடையே தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார்.
இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கைது நடவடிக்கை அமலாக்கத்துறை மூலம் நடைபெற உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பாஜகவை விளாசி வருகிறார். இந்நிலையில் தான் டெல்லி டவுன்ஹாலில் மகளிருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆம்ஆத்மி சார்பில் நடந்தது.
2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது தான் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: இப்போது அதிகமான ஆண்கள் பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்து கோஷமிட்டு வருகின்றன. இவர்களை நீங்கள் நல்வழிப்படுத்த வேண்டும். உங்களின் கணவர் மோடி பெயர் சொல்லி கோஷமிட்டால் இரவு உணவு கிடையாது என அவர்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும்.
மேலும் நீங்கள் (பெண்கள்) அனைவரும் பிற பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கூற வேண்டும். பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்களிடம் அந்த கட்சி எப்போதும் உதவிக்கு வராது. பிரச்சனை என்றால் சகோதரர் கெஜ்ரிவால் தான் ஆதரவாக வந்து நிற்பார் என தெரிவிக்க வேண்டும். மேலும் கட்சியின் செயல் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.
இலவச மின்சாரம், இலவச பஸ் பயணம், மேலும் மாதம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பற்றி எடுத்து கூற வேண்டும். அதேபோல் பாஜக இதை எல்லாம் செய்தார்களா? என சுட்டிக்காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி இத்தகைய திட்டங்களை செயல்படுத்தாத பாஜகவுக்கு நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்? என கேள்வி கேட்டு கெஜ்ரிவாலுக்கு ஓட்டளிக்க வைக்க வேண்டும்'' என கூறினார்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications