புதிய அமைச்சரவை.. முக்கிய இலாக்காக்களை விட்டுக்கொடுக்காத பாஜக! கூட்டணிக்குள் குழப்பமா?
டெல்லி: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், நரேந்திர மோடி இன்று பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார். அதேபோல புதிய அமைச்சரவையும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் முக்கிய துறைகள் பாஜக வசம் மட்டுமே இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். பிரதமர் பதவிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் தூண்களாக இருப்பது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகள்தான். இந்த இரண்டு கட்சிகளின் எம்பிக்களை கழித்துவிட்டால் என்டிஏ கூட்டணிக்கு வெறும் 260 எம்பிக்கள்தான் மிஞ்சுவார்கள். ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை.
எனவே பாஜக இருவரையும் தாங்கு, தாங்கு என்று தாங்குகிறது. என்ன கேட்டாலும் செய்ய தயார் என ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பாஜக முன்வந்திருக்கிறது. எனவே இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய இலாக்காக்களை இரண்டு கட்சிகளும் குறி வைத்திருக்கின்றன. அதாவது மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இரண்டு எம்பிக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
அதேபோல முக்கிய துறைகளை தங்களிடமே வைத்துக்கொள்ள பாஜக முடிவெடுத்திருக்கிறது. அதாவது உள்துறை, பாதுகாப்பு, நிதி, வெளியுறவுத்துறைகளை பாஜகவே வைத்துக்கொள்ள பாஜக திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, உள்துறை அமைச்சராக அமித்ஷா, வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து துறை அமைச்சராக நிதின் கட்காரி ஆகியோர் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் ஐக்கிய ஜனதா தளம் நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை குறி வைத்திருக்கிறது. அதேபோல மக்களவை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி டார்கெட் செய்திருக்கிறது. எனவே அமைச்சரவையில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மறுபுறம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் தேஜஸ்வி யாதவ் ஒன்றாக பயணித்த சம்பவம் பேசு பொருளாகி இருந்தது. அதேபோல கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இப்படியாக இந்தியா கூட்டணி தனது நகர்வை தொடங்கியிருக்கிறது. ஒருவேளை சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கேட்கும் பதவிகளை பாஜக தர மறுத்தால் காங்கிரஸ் அதை வழங்க முன்வரும் என்று கூறப்பட்டு வருகிறது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications