மிதமிஞ்சிய போதை..மணமேடையிலேயே மட்டையான மாப்பிள்ளை..திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
மணமேடையிலேயே போதையில் மாப்பிள்ளை தள்ளாடியதை பார்த்த மணப்பெண் உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
டெல்லி: திருமணத்தின் போது மணமேடையில் போதையில் தள்ளாடிய மாப்பிள்ளையை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண் உடனடியாக திருமணத்தை ரத்து செய்துள்ளார். அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மாப்பிள்ளை போதையில் மண மேடையிலேயே இன்னொருவர் மீது சாய்ந்து விழும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் மதுபோதையில் மாப்பிள்ளை தள்ளாடியபடி இருந்ததோடு மணமேடையிலேயே இருக்க முடியாமல் படுத்தது திருமண வீட்டினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணமகனின் செயலால் கடும் கோபம் அடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தி விட்டார். இல்லற கனவுகளுடன் வந்த மணப்பெண்ணிற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்த இந்த மாப்பிள்ளையின் செயலால் மணமகள் வீட்டினர் கடும் கோபம் அடைந்தனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தடல் புடலாக திருமண ஏற்பாடுகள்
அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் நல்பரி என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்தில் கடந்த வியாழக்கிழமை திருமணம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்காக திருமண வீட்டினர் தடல் புடல் ஏற்பாடுகளும் செய்து இருந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த இரு வீட்டை சேர்ந்த உறவினர்களும் வந்து இருந்தனர். இதனால் திருமணம் நடைபெறும் இடந்த இடம் களை கட்டியிருந்தது. திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்பாக மணமேடையில் மணமகன் பட்டு வேஷ்டி சட்டைகளுடன் உட்கார வைக்கப்பட்டு இருந்தார்.

மணமேடையிலேயே தள்ளாடிய மாப்பிள்ளை
திருமண சடங்குகளும் நடைபெற்று கொண்டிருந்தது. ஆனால், மணமகன் நடவடிக்கையை பார்த்தால் மணமகள் வீட்டினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மதுபோதையில் மிதந்து கொண்டிருந்த மணமகன் ஒரு கட்டத்தில் மேடையில் அமர்ந்து கூட இருக்க முடியாத அளவிற்கு போதையில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் மணமேடையிலே போதையில் சாய்ந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டினர் , மாப்பிள்ளையின் நடவடிக்கை குறித்து முறையிட்டுள்ளனர்.

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
ஆனால், மணமகன் வீட்டைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் போதையில்தான் இருந்தார்களாம். மேலும் பெண் வீட்டினரை அவதூறாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்று முடிவெடுத்த மணப்பெண் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். இதனால் மணமேடைக்கு வரமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து, திருமணத்தை நிறுத்த முடிவு செய்த மணப்பெண் வீட்டினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் புகார் கொடுத்தனர். திருமண செலவுகளுக்காக உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் மணமகள் வீட்டினர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, போலீசார் இரு வீட்டினரையும் அழைத்து பேசியதாக சொல்லப்படுகிறது.

நெட்டிசன்கள் விமர்சனம்
இதனிடையே, மணமேடையில் மாப்பிள்ளை போதை தலைக்கேறிய நிலையில், தள்ளாட்டத்துடன் இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், பட்டு வேஷ்டி சட்டையில் இருக்கும் மணமகன் இருக்க கூட முடியாமல் அருகில் இருந்த மற்றொருவரின் மேல் அப்படியே சாய்ந்து அவரது மடியில் படுத்து விடுகிறார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மாப்பிள்ளையின் செயலை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications