போஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. பாஜக அதிர்ச்சி.. உற்சாகத்தில் காங்கிரஸ்!
போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 1986-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்த முறைகேடு புகார் வைக்கப்பட்டது. அப்போது ஸ்வீடனைச் சேர்ந்த ஏ.பி.போஃபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இந்தியா பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.1,437 கோடி ரூபாய்க்கு பீரங்கி வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை செய்வதற்கு போஃபர்ஸ் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும், பல அதிகாரிகளுக்கும், பாதுகாப்புத்துறை நிர்வாகிகளுக்கும் லஞ்சம் அளித்ததாக புகார் வைக்கப்பட்டது.
இதற்காக ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இதையடுத்து போஃபர்ஸ் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. 1990-ஆம் ஆண்டு சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இந்தியாவின் முதல் பெரிய முறைகேடு இதுதான் என்று கூறப்பட்டது.
10க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் 15 வருடங்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையை 2005ல் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கு முடிந்து 13 வருடம் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ மீண்டும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. பாஜகவைச் சேர்ந்த அஜய் அகர்வாலும் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த மனு குறித்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பவர்களை 2005ல் டெல்லி ஹைகோர்ட் விடுவித்தது சரியே என்றும் தீர்ப்பளித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications