பீகார் சட்டசபை தேர்தல்...பிரச்சாரத்துக்கு ஓகே.. ஆன்லைன் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் வெளியீடு!!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் நிலையில், இன்று தேர்தல் நடத்தை வழிகாட்டு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை, மாஸ்க், சானிடைசர் வழங்கப்படும். பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு பிபிஇ கிட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பீகார் மாநில சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி வெர்சுவல் முறையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், ''வாக்கு மையத்திற்கு வரும் அனைத்து வாக்காளர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இருந்தால் வாக்கு மையத்திற்குள் அனுமதிக்கபட மாட்டார்கள். ஆன் லைன் மூலம்தான் வேட்பாளர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இது சமூக இடைவெளி மற்றும் தனிமனித இடைவெளியை பாதுகாக்கும். வேட்பாளர்களை ஆதரித்து செலுத்தும் பணத்தையும், ஆன் லைனில் செலுத்த வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதிக்கப்படும். ஆனால், மத்திய உள்துறை அளித்திருக்கும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே அனுமதி அளிக்கப்படும். வேட்பாளர்களுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டுமானால், வேட்பாளருடன் சேர்த்து ஐந்து பேர்தான் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பில் இருக்கும் கொரோனா நோயாளிகளும் இறுதி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களது பூத்துக்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் இது நடைமுறைப்படுத்தப்படும். பூத்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படும்.
பீகாரில் கொரோனாவுக்கு 1.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 574 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் சட்டசபையின் காலக்கெடு வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications