பில்கிஸ் பானு குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி? "தலைமறைவு" நாடகம் நடத்துகிறதா குஜராத் பாஜக அரசு?
டெல்லி: பில்கிஸ் பானு வழக்கின் 11 குற்றவாளிகளில் 9 பேர் திடீரென தலைமறைவாகிவிட்டதாக குஜராத் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருவதே குற்றவாளிகளை பாதுகாக்கவா? என சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் 11 குற்றவாளிகளும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை முதலில் நாடினர். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதனால் உச்சநீதிமன்றத்துக்கு சென்றனர் 11 குற்றவாளிகள். உச்சநீதிமன்றமோ குஜராத் மாநில அரசு முடிவெடுக்கலாம் என சொன்னது. குஜராத்தில் ஆளும் பாஜக அரசோ 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்தது. இந்த 11 பேரும் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பில்கிஸ் பானு: குஜராத் பா.ஜ.க. அரசை இடித்த உச்சநீதிமன்றம்- நிலைநாட்டப்பட்டது நீதி- முதல்வர் ஸ்டாலின்
11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பில்கிஸ் பானுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர்கள் ரேவதி லால், சுபாஷினி அலி மற்றும் ரூப்ரேகா வர்மா களத்தில் நின்றனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 11 குற்றவாளிகளின் முன்விடுதலையை ரத்து செய்தது. மேலும் 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குழந்தைக்காக காத்திருந்த பில்கிஸ்.. குதறிய இந்துத்துவ கலவர கும்பல்! குஜராத் கலவரத்தின் கண்ணீர் கதை
ஆனால் தற்போது 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாகிவிட்டதாக குஜராத் மாநில பாஜக அரசு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தாஹோத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பலராம் மீனா கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் முன்னரே 11 குற்றவாளிகளின் சொந்த ஊரான சிங்வாட் பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஆனாலும் குற்றவாளிகளில் சிலர் வெளியே சென்றுள்ளனர். சிலர் எங்களது கண்காணிப்பில்தான் உள்ளனர். சிலர் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை என மழுப்பலான காரணத்தை கூறியுள்ளார். அதாவது 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாகிவிட்டனர் என குஜராத் பாஜக அரசு சொல்வது அப்பட்டமான பொய் நாடகம்; உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகிற செயல். குஜராத் மாநில பாஜக அரசு மக்களை ஏமாற்றுகிறது என கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications