டெல்லியில் 40 இடங்களின் பெயர்களை மாற்றுங்கள்.. பாஜக திடீரென போடும் பிளான்.. இப்படி ஒரு காரணமா?
டெல்லி: ‛‛டெல்லியில் உள்ள 40 இடங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும். இது அடிமைத்தனத்தின் சின்னமாக இருப்பதால் மாற்றம் நிச்சயம் தேவை'' என பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஏப்ரல் 16ல் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. ஜஹாங்கிரிபுரியில் வைத்து இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக வெடித்தது.
இதில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 தரப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஜாஹாங்கிரிபுரியில் ஆக்கிரமிப்பு
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாஜகவின் தலைவர் ஆதேஷ் குப்தா, டெல்லி வடக்கு மற்றும் கிழக்கு மாநகராட்சியின் மேயர்களுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து வடக்கு மாநகராட்சி சார்பில் வன்முறை வெடித்த ஜஹாங்கிரிபுரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடிமைத்தனத்தின் சின்னம்
இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள சில பகுதிகளின் பெயர்கள் சரியில்லை. அதனை மாற்றம் செய்ய வேண்டும் என டெல்லி பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி பாஜகவின் தலைவர் ஆதேஷ் குப்தா கூறியதாவது: டெல்லியில் சில பகுதிகளின் பெயர்கள் அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளன. இதனை மாற்றம் செய்ய விரும்புகிறோம். இதுதொடர்பாக டெல்லி மாநகராட்சி மேயர், கமிஷனர்களுக்கு கடிதம் எழுத உள்ளோம்.

40 பெயர்கள்
இதில் டெல்லியில் உள்ள 40 இடங்களின் பெயர்கள் இடம்பெற உள்ளது. ஹுமான்யூன்பூர், யூசுப்சராய், மசூத்பூர், ஜம்ருத்பூர், பேகம்பூர், பதேபூர் பெரி, ஹவுஸ்காஸ், ஷேக் சராய் உள்ளிட்டவை அடங்கும். இந்த இடங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் வந்துள்ளன. இதனால் இந்த பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என டெல்லி மாநகராட்சி மேயர்களுக்கு கடிதம் எழுத உள்ளோம்.

குறிப்பிட்ட சமுதாயத்தை மகிழ்விக்க...
மேலும் அதற்கான முன்மொழிவை டெல்லி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பெயர் மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கவுன்சிலர்களிடமும் கேட்டு கொள்கிறோம். டெல்லி ஆம்ஆத்மி கட்சி குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களை மகிழ்விக்கும் வகையில் செயல்படுகிறது. அதனால் தான் முகமதுபூர் பகுதியின் பெயரை மாதவ்புரம் என மாற்ற டெல்லி தெற்கு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் கிடப்பபில் போடப்பட்டுள்ளது'' என்றார்.

விரும்பாத பாஜக
இதுபற்றி ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‛‛பெயர் மாற்றம் தொடர்பான முன்மொழிவு பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய மதிப்பாய்வு செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். டெல்லியில் ஆம்ஆத்மி அரசு முறையாக செயல்படுவதை பாஜக விரும்பவில்லை. இதனால் தான் அக்கட்சியினர் ரவுடிகள் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை தேடி அலைவதாக நினைக்கிறேன்'' என்றார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications