மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து.. 3 மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியில் பாஜக!
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியில் தொடருகிறது.
டெல்லி: சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலுமே பாஜக ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கிறது.
மேகாலயா, நாகாலலாந்து. திரிபுரா 3 மாநிலங்களிலுமே தலா 60 தொகுதிகள் உள்ளன. மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு தொங்கு சட்டசபை உருவானது.

மேகாலயாவில் தேர்தலுக்கு முன்னர் என்பிபி, பாஜக கூட்டணி ஆட்சி இருந்தது. தேர்தலின் போது இந்த கூட்டணி பிளவுபட்டு தனித்தனியே தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன. ஆனால் பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இதனால் தொங்கு சட்டசபை உருவானது. உடனடியாக பழைய கூட்டணி கட்சியான 2 இடங்களில் வென்ற பாஜகவை கூட்டணிக்கு மீண்டும் அழைத்தது என்பிபி. மேலும் என்பிபியின் இன்னொரு பழைய கூட்டணி கட்சியான யுடிபி 11 இடங்களில் வென்றது. இதனால் தற்போது கூட்டணிகள் ஆதரவுடன் என்பிபி மேகாலயாவில் ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் மீண்டும் கூட்டணி ஆட்சியில் பாஜக இணைந்து கொள்கிறது.
திரிபுராவைப் பொறுத்தவரையில் பாஜக 32 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 1 இடத்திலும் வென்றுள்ளது. இதனால் திரிபுராவிலும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுவிட்டது. திரிபுராவில் எதிர்க்கட்சிகளான இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை திப்ரா மோதா சிதறடித்தது. திப்ரா மோதா 13 இடங்களில் வென்றது. இதனால் பாஜகவின் வெற்றி திரிபுராவில் இயல்பாகவே சாத்தியமாகிவிட்டது.
நாகாலாந்து மாநிலத்திலும் பாஜக கூட்டணி கட்சிதான் அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. பாஜக மட்டும் 12 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி 25 இடங்களில் வென்றது. கடந்த தேர்தலில் இந்த கூட்டணி மொத்தம் 30 இடங்களில்தான் வென்றிருந்தது. நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக 2 பெண்கள் எம்.எல்.ஏக்களாகி உள்ளனர். இந்த இருவருமே பாஜகவின் கூட்டணி கட்சியான என்டிபிபியை சேர்ந்தவர்கள்.
மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் காங்கிரஸ் கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை என்றே கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications