‛‛இந்தியா தான் எனக்கு எல்லாமே’’.. கனடா குடியுரிமை வேண்டவே வேண்டாம்.. துறக்கும் நடிகர் அக்சய் குமார்
பாலிவுட் நடிகரான அக்சய் குமார் கனடா குடியுரிமை பெற்று அந்நாட்டின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வருகிறார்.
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தனது கனடா நாட்டு குடியுரிமையை துறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா தொடர்பான கருத்துகளை அவர் தெரிவிக்கும்போது நெட்டிசன்கள் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்து வரும் நிலையில், ‛‛இந்தியா தான் எனக்கு எல்லாமே. நான் கனடா நாட்டு பாஸ்போர்ட்டை துறக்க முடிவு செய்து விண்ணப்பம் செய்துள்ளேன்'' என அக்சய் குமார் தெரிவித்துள்ளார். அவர் ஏன் கனடா குடியுரிமையை பெற்றார்? தற்போது ஏன் அதனை துறக்கிறார்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் அக்சய் குமார். இந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றார்.
இவர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 2019ம் ஆண்டு நேர்க்காணல் செய்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். மேலும் அடிக்கடி அவர் கூறும் கருத்துகள் ட்விட்டரில் விவாதத்தை கிளப்பி வருகிறது.

அக்சய் குமார் சர்ச்சை
இந்நிலையில் தான் அக்சய் குமாரை சுற்றி நீண்டகாலமாக ஒரு சர்ச்சை இருந்து வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அக்சய் குமார் வாக்களிக்காததாக தகவல்கள் பரவியது. இதற்கு அவர் கனடா குடியரிமை பெற்றுள்ளதே காரணம் என கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை கனடா குடியுரிமையை பெற்றவர் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

கனடா குடியுரிமையை துறக்க முடிவு
குறிப்பாக இந்தியா பற்றிய கருத்துகளை அவர் கூறும்போது நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் அக்சய் குமார் தனது கனடா குடியுரிமையை விட்டு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி அக்சய் குமாரே உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா தான் எல்லாமே
‛‛இந்தியா தான் எனக்கு எல்லாமாக இருக்கிறது. இந்தியா மீதான அன்பை நிரூபிக்கும் வகையில் கனடா குடியுரிமை நான் துறக்க உள்ளேன். நான் பணம் சம்பாதித்தது இந்தியாவில் தான். நான் இந்தியாவில் இருப்பது நான் செய்த பாக்கியம். இதனால் கனடா நாட்டு குடியுரிமையை துறக்க விண்ணப்பம் செய்துள்ளேன்'' என்றார்.

குடியுரிமை பெற்றது ஏன்?
மேலும் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றதற்கான காரணம் பற்றியும் அவர் விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர்
1990ம் ஆண்டு காலக்கட்டத்தில் எனது 15க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் நான் மனமுடைந்து போனேன். அப்போது கனடாவில் இருந்த என் நண்பன் அங்கு அழைத்தான். வேலை நிமித்தமாக அங்கு சென்றேனர். அப்போது குடியுரிமையை பெற்றேன். இந்த வேளையில் 2 படங்கள் ரிலீசுக்கு காத்திருந்தன. இரண்டும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் எனது நண்பர் திரும்ப போ என்றார். மேலும் படங்கள் கிடைத்தன. இந்த வேளையில் என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை மறந்துவிட்டேன். இதனால் பாஸ்போர்ட்டை மாற்ற வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது எனது பாஸ்போர்ட்டை மாற்ற விரும்பி விண்ணப்பம் செய்துள்ளேன்'' என்றார்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications