மோடியின் கடைசி அஸ்திரம்.. நாளை பட்ஜெட்டின் போது இந்த அறிவிப்பை வெளியிட திட்டம்!
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கிராமங்களை குறி வைத்தும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் நிறைய திட்டங்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
Recommended Video

டெல்லி: நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கிராமங்களை குறி வைத்தும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் நிறைய திட்டங்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள். முக்கியமாக கிராமப்புற ஏழைகளுக்காக இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
நாளை காலை இடைக்கால மத்திய பட்ஜெட் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதில் தேர்தலை முன்னிட்டு பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மக்களின் மனதை கவர பாஜகவிடம் இருக்கும் முக்கிய அஸ்திரம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன திட்டம்
அதன்படி கிராமப்புற ஏழைகளை கவரும் வகையில் நாளை மட்டும் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. சென்ற ஆண்டு கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 16% அதிகம் ஆகும். இதுவரை இந்த அளவிற்கு மத்திய அரசு எப்போதும் கிராமங்களுக்கு நிதி ஒதுக்கியது இல்லை.

வேலை வாய்ப்பு
அதேபோல் கிராமங்களில் உள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை பெறும் வகையிலும் இதில் நிறைய திட்டங்கள் வர இருக்கிறது. சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் வகையில் ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பும் நாளை வெளியாகும்.

மக்களை கவரும்
இந்த திட்டங்கள் கிராமங்களில் உள்ள மக்களை பெரிய அளவில் கவரும் என்று கூறுகிறார்கள். தேர்தலில் இவர்களின் வாக்குதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இவர்களை கவரவே இந்த திட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வர நினைக்கிறது. நாளை இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

ராகுல் கொண்டு வந்தார்
நாட்டில் உள்ள ஏழைகளை கவரும் வகையில் அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்த புதிய திட்டத்தை கொண்டு வர முடிவெடுத்து இருக்கிறது என்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications