மாற்றம் பெறும் இந்திய அஞ்சல்துறை.. லாஜிஸ்டிக் மையமாக மேம்படுத்தப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் கொண்ட லாஜிஸ்டிக் மையமாக இந்திய அஞ்சல்துறை மாற்றப்பட திட்டம் உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கிய போது, கும்பமேளா பிரச்சனையை காரணம் காட்டி சமாஜ்வாதி எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளியேறிய நிலையில், பட்ஜெட் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டது.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

இதில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலகளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பட்ஜெட் இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பட்டியலினபழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அதுமட்டுமல்லாமல் கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் கொண்ட லாஜிஸ்டிக் மையமாக இந்திய அஞ்சல்துறை மாற்றப்பட திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+