கொல்கத்தா கமிஷனருக்கு எதிராக சிபிஐ வழக்கு.. நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
Recommended Video

டெல்லி: நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
சாரதா நிதி நிறுவனம் மற்றும் தி ரோஸ்வேலி ஊழல் தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் நேற்று இரவு அவரது வீட்டுக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கைது செய்தது.

தர்னா
மாநில அரசின் அனுமதி இல்லாமல் கொல்கத்தா கமிஷனரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் எம்எல்ஏ, எம்பிக்கள் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிபிஐ
தங்களை பணி செய்யவிடாததையும் சிபிஐ அதிகாரிகளை போலீஸார் கைது செய்ததையும் கண்டித்து இன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில் சாரதா நிதி நிறுவன வழக்கை விசாரிக்கும் படி உச்சநீதிமன்றம் சிபிஐக்குதான் உத்தரவிட்டது.

ஆதாரங்கள்
ஆனால் இந்த உத்தரவுக்கு முன்பே ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை மம்தா அரசு அமைத்தது. இந்த நிலையில் வழக்கு தொடர்பான ஆதாரங்களை ராஜீவ்குமார் தலைமையிலான குழு திரட்டியுள்ளது. ஆனால் அவற்றை முறைப்படி எங்களிடம் ஒப்படைக்காமல் ஆதாரங்களை அழிக்க பார்க்கின்றனர்.

சிபிஐ வழக்கு
எனவே நிதி நிறுவன மோசடி வழக்கில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விசாரணைக்கு சென்ற 15 அதிகாரிகளை மாநில போலீஸார் சிறை பிடித்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

நாளை விசாரணை
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில் என்ன காரணத்திற்காக ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்றீர்கள். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. நாளை இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். காவல் துறை ஆணையருக்கு எதிரான ஆதாரங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications