சி.பி.ஐ. ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட்கள் அணிய தடை.. தாடி வைக்கவும் தடை.. புதிய இயக்குனர் அதிரடி உத்தரவு
டெல்லி: சி.பி.ஐ. ஊழியர்கள் . ஜீன்ஸ், டி-ஷர்ட்கள் அணியவும், தாடி வைக்கவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றார். இதனை தொடர்ந்து சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் சி.பி.ஐ.யின் அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் அலுவலகத்தில் சாதாரண ஆடை அணிய வேண்டும். ஜீன்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் போன்றவை அணிய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி சி.பி.ஐ ஆண் அதிகாரிகள், மற்ற பணியாளர்கள் சாதாரண சட்டைகள், சாதாரண பேண்ட்கள் மற்றும் சாதாரண ஷூக்கள் அணிந்து வர வேண்டும். ஜீன்ஸ், டி-ஷர்ட்கள், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் அனியக் கூடாது. தாடி வளர்க்க கூடாது. கிளீன் ஷேவ் செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் பெண் அதிகாரிகள், ஊழியர்கள் புடவை, சுடிதார் மற்றும் சாதாரண சட்டை மற்றும் பேண்ட் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சி.பி.ஐ அலுவலகங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படும். இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கிளைத் தலைவர்கள் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் செயல்திறனை மேம்படுத்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சில முக்கியமான நிர்வாக மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications