என்னிடம் அஸ்தானா லஞ்சம் வாங்கிய ஆதாரம் உள்ளது.. சிபிஐக்கு எதிராக இன்னொரு சிபிஐ அதிகாரி வழக்கு!
சிபிஐ தற்காலிக இயக்குனர் நாகேஸ்வர் ராவ் தன்னை பணியிட மாற்றம் செய்ததை எதிர்த்து சிபிஐ அதிகாரி ஏ.கே பாஸி வழக்கு தொடுத்துள்ளார்.
டெல்லி: சிபிஐ தற்காலிக இயக்குனர் நாகேஸ்வர் ராவ் தன்னை பணியிட மாற்றம் செய்ததை எதிர்த்து சிபிஐ அதிகாரி ஏ.கே பாஸி வழக்கு தொடுத்துள்ளார்.
சிபிஐ அமைப்பில் தொடர்ந்து நிறைய சர்ச்சைகள் பிரச்சனைகள் நடந்து வருகிறது. சிபிஐ அமைப்பு சிபிஐ மீது வழக்கு தொடுப்பதும், சிபிஐ அமைப்பே சிபிஐ அலுவலகத்தில் ரெய்டு செய்வதும் சென்ற வாரங்களில் நடந்தது.

இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா விடுப்பில் அனுப்பப்பட்டார். சம்பந்தமே இல்லாமல் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
நாகேஸ்வர் ராவ் இயக்குனராக பொறுப்பேற்ற முதல் நாளே 13 சிபிஐ அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தார்.
ராகேஷ் அஸ்தானாவின் லஞ்ச வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி ஏகே பாஸியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
[இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்?]
இந்த நிலையில் சிபிஐ செய்த இந்த பணியிட மாற்றத்திற்கு எதிராக சிபிஐ அதிகாரி ஏகே பாஸி வழக்கு தொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், என்னிடம் ராகேஷ் அஸ்தானா குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அவர் 3.3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது பற்றிய பத்திரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் வெளியே கொண்டு வருவேன் என்று அஞ்சி என்னை பணியிட மாற்றம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தான் பணியில் இருந்து விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அதுபற்றிய விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications