வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்
வங்கி மோசடி வழக்குகளில் விசாரணையை தாமதம் செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சிபிஐ அதிகாரிகளே லஞ்ச வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வங்கிகளில் கடன் வாங்கிய மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் பணத்தை தராமல் ஏமாற்றின, இந்த வழக்குகளை மூடி மறைக்கவும், விசாரணையை தாமதப்படுத்தவும் சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் நான்கு சிபிஐ அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.
சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் டெல்லி, குர்கான், மீரட், நொய்டா, கான்பூர், காசியாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் சோதனை மேற்கொண்டனர். லஞ்சப்புகாரில் சிக்கிய சிபிஐ அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் பரிசோதனை நடைபெற்றது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திலேய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் காசியாபாத் சிபிஐயில் டிஎஸ்பியாக பணிபுரியும் ஆர்.கே. ரிஷி, மற்றொரு டிஎஸ்பியாக சங்க்வான், இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர்குமார் சிங், ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.சி. ஜோஷி தெரிவித்துள்ளார். நால்வர் மீதும் அதிகார துஷ்பிரயோகம் செய்தல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்ள லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.
இதில் சிபிஐ இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர்குமார் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி ரேங்க் அதிகாரிகள் ஆர்.கே. ரிஷி மற்றும் சங்க்வான் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications