சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிபிஎஸ்இ
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என சிபிஎஸ்இ கல்வி தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.இந்த தேர்வை சுமார் 27 லட்சம் பேர் எழுதி உள்ளார்கள்.

இந்நிலையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த மே2ம் தேதி வெளியான நிலையில், 10 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இந்த தேர்வுகள் முடிவுகள் www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in இணையதளங்களில் வெளியாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது-
இதையடுத்து நாடு முழுவதும் பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தை தொடர்பு தேர்வு முடிவுகள் இன்று எப்போது வெளியாகும் என்று தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என விளக்கம் அளித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ தேர்வு வாரிய அதிகாரி ரமா சர்மா தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications