பெண் அடிமைத்தனம்.. 10ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
டெல்லி: 10ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்குவதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் ஆங்கிலத் தேர்வில் சிறுகுறிப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு விடையளிப்பது போன்று இருந்தது.
அதில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் பாலின பாடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆண்களுக்கு கீழ் பெண்கள் அடங்கியிருக்க வேண்டும் என்ற ரீதியில் கேள்வி இருந்தது.

பிற்போக்குத்தனம்
அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. மத்திய அரசின் பிற்போக்குத்தனமான கருத்தை புத்தகத்தில் திணித்ததாகவே இது காட்டியதாக பலர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

பிற்போக்குத்தனம்
இதை நம்ப முடியவில்லை. இதைத்தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோமா? இதன் மூலம் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமாக கருத்துகளை பாஜக அரசு ஆமோதிக்கிறது என்பதை தெள்ள தெளிவாகிறது. இதை ஏன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வைத்துள்ளார்கள்? என கேள்வி எழுப்பியதுடன் அந்த வினாத்தாளை பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டருக்கும் டேக் செய்திருந்தார்.

பிரச்சினை
இதையடுத்து இன்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போதும் சோனியாகாந்தி சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குறித்த பிரச்சினையை எழுப்பினார். இதனிடையே தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி சரியா தவறா என நிபுணர் குழு ஆராய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று அந்த கேள்வியை நீக்குவதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.

மதிப்பெண் வழங்குவதாக அறிவிப்பு
அந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. பெண்கள், சமூக ஆர்வலர்கள், பெண் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் கண்டனத்திற்கு பிறகு சிபிஎஸ்இ இவ்வாறு அறிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications