சிபிஎஸ்இ பள்ளி தேர்வுகள், என்ஜினியரிங் நுழைவு தேர்வுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு
டெல்லி: கொரானா வைரஸ் பரவி வருவதன் காரணமாக அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் அடுத்த இரு வாரங்களில் அதன் பரவும் வேகத்தை கட்டாயம் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் தீவிரமாக பணியாற்றி வரும் மத்திய அரசு அதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால் அதேநேரம் டெல்லி, ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெற்று வந்தன. தேர்வு இல்லாத பள்ளிகளுக்கும் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் சிபிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சம் நேற்று இரவு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து வரும் மார்ச் 31 வரை சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எந்த தேர்வுகளும் நடைபெறாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளும் மார்ச் 31 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தள்ளிவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் அனைத்தும் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications