வெறும் 4% மக்களுக்கு தேவையான.. தடுப்பூசிக்கு மட்டும் ஆர்டர் அளித்துள்ள மத்திய அரசு.. அதிர்ச்சி தகவல்
டெல்லி: 140 கோடியைக் கொண்ட இந்தியாவில், வெறும் 4% மக்களுக்குத் தேவையான தடுப்பூசியை மட்டுமே மத்திய அரசு சீரம் நிறுவனத்திற்கு ஆர்டர் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு
மே 1ஆம் தேதி முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாட்டில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மாநில அரசுகளும் தங்களிடம் போதியளவு தடுப்பூசி இல்லை என்றே தெரிவித்துள்ளனர். இதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது.

வெறும் 4%
இந்நிலையில், மத்திய அரசு சீரம் நிறுவனத்திடம் வெறும் 11 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஆர்டர் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒருவருக்கு இரண்டு டோஸ் விகிதத்தில் 5.5 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி அளிக்க முடியும். 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், இது வெறும் 4 சதவிகிதமாகும்.

2 ஆண்டுகள் ஆகலாம்
உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமாக சீரம் நிறுவனத்திற்கு மத்திய மாநில அரசுகள் ஆர்டர் அளித்துள்ளன. இருப்பினும் அந்நிறுவனம், தற்போது மாதத்திற்கு 6 முதல் 7 கோடி தடுப்பூசிகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது. வரும் ஜூலை மாதம் முதல் 10 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யவுள்ளது. இந்த நிலையில் உற்பத்தி இருந்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்த 2 ஆண்டுகள் வரை ஆகும்.

அதிருப்தி
கொரோனா 2ஆம் அலை, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவை காரணமாக இந்தியாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தியா மக்கள்தொகையில் வெறும் 4% மக்களுக்குத் தேவையான தடுப்பூசிக்கு மட்டுமே மத்திய அரசு ஆர்டர் அளித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications