ரபேல்: சுப்ரீம் கோர்ட்டுக்குத் தவறான தகவலா?.. திருத்தம் கோரி மனு செய்த மத்திய அரசு
டெல்லி: ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு செய்துள்ளது.
ரபேல் வி்வகாரம் தொடர்பான வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முறையாக செயல்பட்டுள்ளது. ரபேல் போர் விமானங்கள் தொடர்பான அனைத்தையும் முறையாக செய்துள்ளது. எனவே இது குறித்து விரிவான விசாரணை தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது.

ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சிஏஜி அளித்த அறிக்கையை பொதுக் கணக்குக் குழு பரிசீலித்துள்ளதாகவும் அந்த அடிப்படையில், இந்தத் தீர்ப்பை அளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இங்குதான் பிரச்சினை வெடித்துள்ளது.
பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே ஆவார். இவர் சிஏஜி அறிக்கை தனது குழுவுக்கு வரவே இல்லை என்றும் தான் அதைப் பார்க்கக் கூட இல்லை என்றும் அதிரடியாக கூறி விட்டார். மேலும் இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தியும் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளைக் கேட்டார்.
சிஏஜி அறிக்கை என்னவாவனது, எங்கே போனது, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விட்டார்களா என்றும் அவர் விளாசித் தள்ளியிருந்தார். இது மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உச்சநீதிமன்றத்திடம் சீலிட்ட கவரில் கொடுக்கப்பட்ட அபிடவிட்டில், சிஏஜி, பொதுக் கணக்கு குழு ஆகியவை தொடர்பான தகவல் தொடர்பாக தவறான புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆவணத்தில், சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையை பொதுக் கணக்குக் குழு படித்ததாக கோர்ட் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளது.
உண்மையில் பொதுக் கணக்குக் குழு சிஏஜி அறிக்கையைப் படிக்கவில்லை. இந்தத் தகவல் தொடர்பாக உச்சநீதிமன்றம் திருத்தம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications