அடுத்த ஆண்டு முதல் பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில் பயணம்.. குட் நியூஸ் சொன்ன நிதின் கட்கரி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருப்பதி, மாமல்லபுரம் - முகையூர், தர்மபுரி - தொரப்பள்ளி, பொள்ளாச்சி - மடத்துக்குளம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி, மேலூர் - காரைக்குடி, விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் - பழனி, திருமங்கலம் - வடுகப்பட்டி சாலை பணிகளும் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றார் நிதின் கட்கரி.

ராஜ்யசபாவில் இது தொடர்பாக நிதின் கட்கரி அளித்த பதில் விவரம்: சென்னை - பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படுமென, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

budget 2024 parliament 2024

261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, 61.74% அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்தத் திட்டம் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை - பெங்களூரு இடையேயான பயணத் தொலைவு மற்றும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு நான்குவழி உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகள், பல்வேறு கட்டங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்படும்.

சென்னை - ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை மற்றும் காரைப்பேட்டை - வாலாஜாப்பேட்டை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் பணிகள் 98.5% முடிவடைந்துள்ளதாகவும், ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை இடையிலான பணிகள் 56.92% அளவிற்கும் காரைப்பேட்டை - வாலாஜாபேட்டை பணிகள் 74.90% அளவிற்கும் முடிவடைந்துள்ளதாகவும், இந்தப் பணிகள் 2025 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும்.

இது தவிர, சென்னை - திருப்பதி, மாமல்லபுரம் - முகையூர், தர்மபுரி - தொரப்பள்ளி, பொள்ளாச்சி - மடத்துக்குளம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி, மேலூர் - காரைக்குடி, விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் - பழனி, திருமங்கலம் - வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+