பிரக்ஞானந்தாவின் அக்காவுக்கு பிரதமர் மோடி தந்த கவுரவம்! மகளிர் தினத்தில் வைஷாலிக்கு அதிர்ஷ்டம்
டெல்லி: மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அக்காள், செஸ் வீராங்கனையான வைஷாலிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாண்ட வைஷாலி அதில் பதிவு செய்த போஸ்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேபோல் வேறு யாரெல்லாம் பிரதமர் மோடியின் வலைதள பக்கத்தை இன்று கையாண்டனர் என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை போற்றும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாளர்வார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று அவரது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை தமிழக செஸ் வீராங்கனை கையாண்டார். இவர் யார் என்றால் சென்னையை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்
பிரக்ஞானந்தாவின் அக்காள் ஆவார். 2001ம் ஆண்டில் பிறந்த இவர் FIDE கிராண்ட் ஸ்விஸ் பட்டத்தை 2023ம் ஆண்டில் வென்று பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டிக்குள் நுழைந்தார். இதற்கு முன்பு கடந்த 2012ம் ஆண்டில் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் வைஷாலி வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 2015ல் வாகை சூடினார். 2018 ம் ஆண்டில் பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.
இந்நிலையில்தான் பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாண்ட வைஷாலி அதில், "வணக்கம். நான் வைஷாலி. மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் சமூக வலை தள பக்கத்தை கையாள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் செஸ் விளையாடுகிறேன். மேலும் பல போட்டிகளில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவ படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்று தனது 2 போட்டோக்களுடன் பதிவிட்டுள்ளார்.
வைஷாலியை போல் மேலும் 5 பேர் இன்று பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை கையாண்டு தங்களின் சாதனைகள் குறித்து போட்டோக்களுடன் பதிவிட்டனர். அதன்படி பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் அனந்தபூர் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலதிபரான அனிதா தேவி, ‛ப்ரண்டையர் மார்க்கெட்' நிறுவனரும், சிஇஓவுமான அஜைதா ஷா, சமர்த்யம் இணை நிறுவனம் டாக்டர் அஞ்லி அகர்வால் உள்ளிட்டோரும் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாண்டனர்.
அதேபோல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவரும், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்ற தேர்வாகி உள்ள எலினா மிஸ்ரா, இஸ்ரோவில் 24 ஆண்டுகளாக விஞ்ஞானியாக பணியாற்றி வரும் மத்திய பிரதேச மாநிலம் சாகரை சேர்ந்த ஷில்பா சோனி ஆகியோரும் இன்று பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாண்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications