திபெத்தியர்கள் படையணியை களமிறக்கிய சீனா- டோக்லாமில் மீண்டும் இந்தியாவுடன் வெடிக்க இருக்கும் மோதல்?
டெல்லி: சிக்கிம்- பூட்டான் இடையேயான சும்பி பள்ளத்தாக்கு பகுதியில் திபெத்தியர்கள் படையணியை சீனா களமிறக்கி இருக்கிறது. இதனால் பூட்டானின் டோக்லாம் பகுதியில் இந்தியா- சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்தியாவின் சிக்கிம் மாநிலம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருக்கும் பூட்டான் நாடு ஆகியவற்றுக்கு இடையே சும்பி பள்ளத்தாக்கு உள்ளது. இதன் அருகே பூட்டான், சீனா உரிமை கோரும் டோக்லாம் பீடபூமி பகுதி இருக்கிறது.

இந்தியா பதிலடி
டோக்லாமை தம் வசமாக்கிக் கொள்வதில் சீனா நீண்டகாலமாக முனைப்பு காட்டுகிறது. டோக்லாமை சீனா கைப்பற்ற முயற்சித்ததை நமது ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தும் வருகின்றனர்.

திபெத்தியர்கள்
இந்த நிலையில் சும்பி பள்ளத்தாக்கு பகுதியில் சீனா புதிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த முறை திபெத்திய இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுத்து அவர்களை சும்பி பள்ளத்தாக்கில் களமிறக்கி இருக்கிறது சீனா. இந்த முதல் படையணியில் 100 திபெத்திய இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தொடரும் பயிற்சி
இதனையடுத்து 2-வது படையணிக்கும் சீனா ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இதுவும் திபெத்திய இளைஞர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. திபெத்தை ஆக்கிரமித்த சீனா இப்போது திபெத் இளைஞர்களை ராணுவமயமாக்கி வருகிறது.
Recommended Video

டோக்லாமில் மீண்டும் மோதல் வாய்ப்பு?
சீனாவின் சும்பி பள்ளத்தாக்கு நடவடிக்கையிலான் மீண்டும் டோக்லாம் பிரச்சனை வெடிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. சீனாவைப் பொறுத்தவரை டோக்லாம் பகுதியை கைப்பற்றிவிட்டால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை எளிதாக ஆக்கிரமிக்கலாம் என்பது கணக்கு.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications