காஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்று இந்தியாவை சீனா அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையிின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு, சீன பிரதிநிதி நிருபர்களிடம் கூறியதாவது: பாதுகாப்பு கவுன்சில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வான முடிவுகள் எடுப்பது, ஆபத்தானது. ஐ.நா. சாசனத்தின்படி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இப்போதுள்ள நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது.

China says Indias move unilateral and dangerous and backs Pakistan

காஷ்மீரில் பதற்றம் ஏற்படக்கூடாது என்று சீனா சார்பில் இந்தியா, பாகிஸ்தானிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிராந்தியத்தில் பதட்டத்தை உருவாக்க வேண்டாம். இப்படியான நிலைமை ஆபத்தானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐ.நா.வுக்கான ரஷ்ய பிரதிநிதி கூறுகையில், "நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு நட்பு நாடு. ரஷ்யா தனிப்பட்ட அஜென்டா எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.

எனவே, டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் என இருதரப்பிடமுமே நாங்கள் நட்பை பாராட்டி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+