மோடி முதல் கருணாநிதி வரை உளவு பார்த்தது சீனா.. ஆனால் தனியார் நிறுவனமாம்- இதுதான் மத்திய அரசு பதில்!
டெல்லி: இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், இந்நாள், முன்னாள் முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், வர்த்தக நிறுவனங்களின் தகவல்களை சீன அரசு நிறுவனமான ஷென்சென் ஷென்ஹூவா உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்பி வேணுகோபால் விளக்கம் கேட்டு இருந்தார்.
இந்தியாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள், சோனியா காந்தி அவரது குடும்பத்தினர், தற்போது முதல்வர்களாக இருக்கும் மம்தா பானர்ஜி, அமரிந்தர் சிங் உள்பட 15 முதல்வர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சீன நிறுவனம் உளவு பார்த்ததாக கூறப்பட்டு இருந்தது.

ஜெய்சங்கர்
இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுத்துபூர்வ விளக்கம் அளித்து இருந்தார். அதில், ''இந்தியாவில் சீன நிறுவனம் உளவு பார்த்தது தொடர்பாக இந்திய வெளி விவகாரத்துறையின் மூலம் சீன தூதரகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. பீஜிங்கில் இருக்கும் நமது தூதரகமும் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.

வெளியுறவுத்துறை
ஷென்சென் ஷென்ஹூவா நிறுவனம் தனியார் நிறுவனம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்துடன் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகவல் திருட்டு
இந்திய குடிமக்களின் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாப்பதில் மத்திய அரசு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. கவனம் செலுத்தி வருகிறது. தனிப்பட்ட நபர்களின் விஷயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது அரசுகள் தலையிடுவது குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது.

சிறப்பு கமிட்டி
இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரின் கீழ் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டி இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும். சட்டத்திற்கு மீறி நடந்து கொண்டுள்ளதா என்பது குறித்து அறிந்து, 30 நாட்களுக்குள் பரிந்துரைகளை அனுப்பும்'' என்று தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ்
இதையடுத்து விளக்கம் அளித்து இருந்த காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால், ''எதாவது சட்டத்தை மீறி நடந்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இப்படி கேட்பதால் நாங்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

அதிர் ரஞ்சன்
கிழக்கு லடாக்கில் சீனாவின் அத்துமீறல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். இதுகுறித்து பேசுவதற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கேட்டது. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, லோக் சபாவில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. ''நாங்களும் ராணுவ வீரர்களுக்கு துணையாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவும், சீனாவுக்கு எச்சரிக்கை விடுவதற்கும் நேரம் கேட்டு இருந்தோம். ஆனால், மறுக்கப்பட்டுள்ளது என்று அதிர் ரஞ்சன் தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications