முழு சுதந்திரம்.. எதற்கும் தயாராக இருங்கள்.. முப்படைக்கு பறந்த உத்தரவு.. பாதுகாப்பு துறை திட்டம்?
இந்தியாவின் முப்படைகள் அனைத்தும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும், மோசமான சூழ்நிலைக்கு கூட இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகிறது.
லடாக்: இந்தியாவின் முப்படைகள் அனைத்தும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும், மோசமான சூழ்நிலைக்கு கூட இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகிறது.
நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
இந்த தாக்குதலை தொடர்ந்து நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை மேஜர்கள் மற்றும் முப்படை தளபதி பிபின் ராவத் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். எல்லை நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

ஆலோசனை
இதை தொடர்ந்து நேற்று இரவே அவர் பிரதமர் மோடியை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். இந்த சந்திப்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர், அமித் ஷா, ராஜ்நாத் சிங் இந்த மீட்டிங்கில் உடன் இருந்தனர். இதில் இந்தியா - சீனா இடையே இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை. எல்லையில் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் இல்லை என்று ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல்கள் வருகிறது.

தயார் நிலை
இந்த நிலையில் இந்தியாவின் முப்படைகள் அனைத்தும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும், மோசமான சூழ்நிலைக்கு கூட இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் வீரர்களை மூன்று படைகளும் தயாராக வைத்து இருக்க வேண்டும் .

லோக்கல் படை எப்படி
படைகளை முன்னோக்கி செல்ல தயார்படுத்த வேண்டும். எல்லையில் இருக்கும் லோக்கல் படைகள் தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. நிலைமைக்கு ஏற்றபடி அவர்கள் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். விதிகளுக்கு ஏற்ப சுதந்திரமாக செயல்பட அளிக்கப்படுகிறது என்று பாதுகாப்பு துறை முப்படைகளிடம் தகவல் தெரிவித்ததாக கூறுகிறார்கள்.

திபெத் எப்படி
அதோடு திபெத் பகுதியில் இந்தியா பாதுகாப்பை அதிகரித்துள்ளது. திபெத் வழியாக சீனா ஊடுருவல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் தற்போது இந்தியா - திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையை ராணுவத்திற்கு கீழ் கொண்டு வர இந்தியா முடிவு செய்து வருகிறது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பான அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications