அருணாச்சலில் கிடைத்த தர்மஅடி.. இரவோடு இரவாக இந்திய பெருங்கடலிலிருந்து "ஓடிய" சீன உளவுக் கப்பல்
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவிய நிலையில், இந்தியப் பெருங்கடலில் வட்டமடித்துக்கொண்டு இருந்த சீனாவின் உளவுக் கப்பல் திடீரென வெளியேறி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அந்த உளவுக் கப்பலின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும் பணியிலும் ராணுவம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மோதல் உருவாக்கிய போர்ப் பதற்றம்
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த 9-ம் தேதி அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருட்டுக்கட்டை, ஹாக்கி மட்டை, இரும்பு ராடு சகிதமாக நுழைந்த 300 சீனப் படையினரை, வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து விரட்டி அடித்துள்ளனர். கடந்த 2020-இல் லடாக்கில் பெரும் ஆராவாரத்துடன் நுழைந்து, பின்னர் இந்திய ராணுவத்தினருடன் சண்டையிட முடியாமல் ஓடியதை போல இந்த முறையும் சீன ராணுவத்தினர் பின்வாங்கியுள்ளனர்.

மீண்டும் வந்த சீன உளவுக் கப்பல்
இப்போது சீனப் படையினர் பின்வாங்கி இருந்தாலும் நிச்சயம் அவர்கள் திரும்ப வருவார்கள் என இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் அருணாச்சலப் பிரதேசத்தில் தீவிர கண்காணிப்பில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்தியப் பெருங்கடலில் மீண்டும் சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் 5 வந்து சென்றிருக்கிறது.

இலங்கை துறைமுகத்தில்..
சீனாவின் அதிநவீன உளவு கப்பலான யுவான் வாங் 5, இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தது. இந்த துறைமுகமானது ஆந்திரா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடல் எல்லைகள் அருகே அமைந்துள்ளது. எனவே, இந்த உளவுக் கப்பல் மூலமாக இந்த மூன்று மாநிலங்களில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை கண்காணிக்கவும், முக்கிய தகவல்களை திரட்டவும் முடியும் என்பதால் யுவான் வாங் 5 கப்பல் அங்கு நிறுத்தப்படுவதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அந்தக் கப்பல் அங்கு 4 நாட்கள் நிறுத்தப்பட்டு பின்னரே கொண்டு செல்லப்பட்டது.

உளவு அமைப்புகள் விசாரணை
இந்த சூழலில், தற்போது மீண்டும் அதே கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வந்து சென்றதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியதற்கு முன்னதாக இந்த உளவுக் கப்பல் வந்து சென்றிருக்கிறது. நேற்று வரை இருந்த அந்த கப்பல் நேற்று இரவோடு இரவாக வெளியேறி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பிராநதியத்தில் தாக்குதல் நடத்தப்படும் போது, தென் பகுதிக்குள் சீனா ஏன் உளவுக் கப்பலை அனுப்பியது? என இந்திய உளவு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications