அருணாச்சலில் கிடைத்த தர்மஅடி.. இரவோடு இரவாக இந்திய பெருங்கடலிலிருந்து "ஓடிய" சீன உளவுக் கப்பல்
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவிய நிலையில், இந்தியப் பெருங்கடலில் வட்டமடித்துக்கொண்டு இருந்த சீனாவின் உளவுக் கப்பல் திடீரென வெளியேறி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அந்த உளவுக் கப்பலின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும் பணியிலும் ராணுவம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மோதல் உருவாக்கிய போர்ப் பதற்றம்
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த 9-ம் தேதி அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருட்டுக்கட்டை, ஹாக்கி மட்டை, இரும்பு ராடு சகிதமாக நுழைந்த 300 சீனப் படையினரை, வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து விரட்டி அடித்துள்ளனர். கடந்த 2020-இல் லடாக்கில் பெரும் ஆராவாரத்துடன் நுழைந்து, பின்னர் இந்திய ராணுவத்தினருடன் சண்டையிட முடியாமல் ஓடியதை போல இந்த முறையும் சீன ராணுவத்தினர் பின்வாங்கியுள்ளனர்.

மீண்டும் வந்த சீன உளவுக் கப்பல்
இப்போது சீனப் படையினர் பின்வாங்கி இருந்தாலும் நிச்சயம் அவர்கள் திரும்ப வருவார்கள் என இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் அருணாச்சலப் பிரதேசத்தில் தீவிர கண்காணிப்பில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்தியப் பெருங்கடலில் மீண்டும் சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் 5 வந்து சென்றிருக்கிறது.

இலங்கை துறைமுகத்தில்..
சீனாவின் அதிநவீன உளவு கப்பலான யுவான் வாங் 5, இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தது. இந்த துறைமுகமானது ஆந்திரா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடல் எல்லைகள் அருகே அமைந்துள்ளது. எனவே, இந்த உளவுக் கப்பல் மூலமாக இந்த மூன்று மாநிலங்களில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை கண்காணிக்கவும், முக்கிய தகவல்களை திரட்டவும் முடியும் என்பதால் யுவான் வாங் 5 கப்பல் அங்கு நிறுத்தப்படுவதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அந்தக் கப்பல் அங்கு 4 நாட்கள் நிறுத்தப்பட்டு பின்னரே கொண்டு செல்லப்பட்டது.

உளவு அமைப்புகள் விசாரணை
இந்த சூழலில், தற்போது மீண்டும் அதே கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வந்து சென்றதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியதற்கு முன்னதாக இந்த உளவுக் கப்பல் வந்து சென்றிருக்கிறது. நேற்று வரை இருந்த அந்த கப்பல் நேற்று இரவோடு இரவாக வெளியேறி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பிராநதியத்தில் தாக்குதல் நடத்தப்படும் போது, தென் பகுதிக்குள் சீனா ஏன் உளவுக் கப்பலை அனுப்பியது? என இந்திய உளவு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications