அருணாச்சலில் கிடைத்த தர்மஅடி.. இரவோடு இரவாக இந்திய பெருங்கடலிலிருந்து "ஓடிய" சீன உளவுக் கப்பல்
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவிய நிலையில், இந்தியப் பெருங்கடலில் வட்டமடித்துக்கொண்டு இருந்த சீனாவின் உளவுக் கப்பல் திடீரென வெளியேறி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அந்த உளவுக் கப்பலின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும் பணியிலும் ராணுவம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மோதல் உருவாக்கிய போர்ப் பதற்றம்
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த 9-ம் தேதி அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருட்டுக்கட்டை, ஹாக்கி மட்டை, இரும்பு ராடு சகிதமாக நுழைந்த 300 சீனப் படையினரை, வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து விரட்டி அடித்துள்ளனர். கடந்த 2020-இல் லடாக்கில் பெரும் ஆராவாரத்துடன் நுழைந்து, பின்னர் இந்திய ராணுவத்தினருடன் சண்டையிட முடியாமல் ஓடியதை போல இந்த முறையும் சீன ராணுவத்தினர் பின்வாங்கியுள்ளனர்.

மீண்டும் வந்த சீன உளவுக் கப்பல்
இப்போது சீனப் படையினர் பின்வாங்கி இருந்தாலும் நிச்சயம் அவர்கள் திரும்ப வருவார்கள் என இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் அருணாச்சலப் பிரதேசத்தில் தீவிர கண்காணிப்பில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்தியப் பெருங்கடலில் மீண்டும் சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் 5 வந்து சென்றிருக்கிறது.

இலங்கை துறைமுகத்தில்..
சீனாவின் அதிநவீன உளவு கப்பலான யுவான் வாங் 5, இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தது. இந்த துறைமுகமானது ஆந்திரா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடல் எல்லைகள் அருகே அமைந்துள்ளது. எனவே, இந்த உளவுக் கப்பல் மூலமாக இந்த மூன்று மாநிலங்களில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை கண்காணிக்கவும், முக்கிய தகவல்களை திரட்டவும் முடியும் என்பதால் யுவான் வாங் 5 கப்பல் அங்கு நிறுத்தப்படுவதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அந்தக் கப்பல் அங்கு 4 நாட்கள் நிறுத்தப்பட்டு பின்னரே கொண்டு செல்லப்பட்டது.

உளவு அமைப்புகள் விசாரணை
இந்த சூழலில், தற்போது மீண்டும் அதே கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வந்து சென்றதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியதற்கு முன்னதாக இந்த உளவுக் கப்பல் வந்து சென்றிருக்கிறது. நேற்று வரை இருந்த அந்த கப்பல் நேற்று இரவோடு இரவாக வெளியேறி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பிராநதியத்தில் தாக்குதல் நடத்தப்படும் போது, தென் பகுதிக்குள் சீனா ஏன் உளவுக் கப்பலை அனுப்பியது? என இந்திய உளவு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications