Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழிநெடுக கண்ணீர்.. தலைவர்கள் அஞ்சலி.. மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உடல் ராணுவ மரியாதையோடு தகனம்

பிபின் ராவத் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகாவின் உடல் இன்று டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. இலங்கை, பூடான், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளபதிகள் இந்த இறுதி சடங்குகளில் பங்கேற்றனர்.

Recommended Video

    நீலகிரி: உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி… நீலகிரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு!

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு கண்ணீர்விட்டபடி வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று முழக்கமிட்டனர்.குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

    இதில், பிபின் ராவத் உட்பட, 13 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த ஒருவர் பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    துயரம்

    துயரம்

    இந்தியாவையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணுவ நடைமுறைகள் முடிந்தபிறகு, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் நேற்று டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது..

     பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, 2:00 மணிக்கு பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது... இலங்கை, பூடான், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளபதிகள் இந்த இறுதி சடங்குகளில் பங்கேற்றுள்ளனர்...காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக தற்போது எடுத்துச் செல்லப்படுகிறது.. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர்.. வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று பொதுமக்கள் உணர்ச்சிபெருக்குடன் முழக்கமிட்டு வருகின்றனர்... மாலை 4:00 மணியளவில், பிரார் சதுக்கம் இடுகாட்டில், பிபின் ராவத், அவருடைய மனைவியின் உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     அடையாளம்

    அடையாளம்

    அடையாளம் காணப்படும் வரை, மற்ற 10 பேரின் உடல்கள் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று காலை 11:00 மணிக்கு, டெல்லி காமராஜ் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது... பகல் 12:30 மணியில் இருந்து 1:30 மணி வரை ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

     அரசு மரியாதை

    அரசு மரியாதை

    அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, 2:00 மணிக்கு பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது... இலங்கை, பூடான், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளபதிகள் இந்த இறுதி சடங்குகளில் பங்கேற்றனர்... மராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக தற்போது எடுத்துச்செல்லப்பட்டது.. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு கண்ணீர்விட்டபடி வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று பொதுமக்கள் உணர்ச்சிபெருக்குடன் முழக்கமிட்டனர்... மாலை 4:00 மணியளவில், பிரார் சதுக்கம் இடுகாட்டில், பிபின் ராவத், அவருடைய மனைவியின் உடல் எரியூட்டப்பட்டது. முழு ராணுவ மரியாதைக்கு பின் உடல் எரியூட்டப்பட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+