உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் யூ-டர்ன்.. தலைமை நீதிபதியிடம் போகும் குமுறல்
டெல்லி: நீதிபதிகள் நியமன விவகாரம் ஒன்றில் உச்சநீதிமன்ற, நீதிபதிகள் கொலிஜியம், தனது முடிவை மாற்றிக்கொண்ட விவகாரம் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. இந்த 'யூ டர்ன்னுக்கு' அதிருப்தி தெரிவித்து, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்க, தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிளை கொண்ட கொலிஜியம் நடைமுறை, நமது நாட்டில் செயல்பாட்டில் உள்ளது.

கடந்த டிசம்பர் 12ம் தேதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய கொலிஜியம் கூடி ஆலோசனை நடத்தியது. அதில், ராஜஸ்தான் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள பிரதீப் நந்த்ரஜாக் மற்றும் டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பணி உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
இதன்பிறகு கொலிஜியம் கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் மீண்டும் கூடியது. இந்த காலகட்டத்தில் நீதிபதி மதன் பி லோகூர் ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு பதில், கொலிஜியத்தில் அருண் மிஷ்ரா இடம் பிடித்திருந்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, பிரதீப் நந்த்ரஜாக் தலைமையிலான டெல்லி ஹைகோர்ட் அமர்வு 'F Hoffmann-La Roche Ltd vs Cipla Ltd' என்ற வழக்கில் தவறான உத்தரவை பிறப்பித்து அதற்கு வருத்தம் தெரிவித்த விவகாரம் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரத்திற்காக, உச்சநீதிமன்ற நீதிபதி பட்டியலில் இருந்து பிரதீப் நந்த்ரஜாக் பெயரை விடுவித்துவிட கொலிஜியம் முடிவு செய்தது.
இதேபோல ராஜேந்திர மேனனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் தங்களது பழைய முடிவை கைவிட்ட கொலிஜியம், இவ்விருவருக்கும் பதிலாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது.
ஆனால், உச்சநீதிமன்றத்தை சேர்ந்த சில நீதிபதிகளுக்கு, இவ்வாறு கொலிஜியம் தனது முடிவை மாற்றியிருக்க கூடாது என்ற எண்ணம் உள்ளது. அதில் சஞ்சய் கவுல் என்ற நீதிபதி, தனது எண்ணத்தை கடிதமாக எழுதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலிஜியத்தின் முடிவு மதிக்கப்படத்தக்கதாக இருக்க வேண்டும் என்றால் அதில் மாற்றம் செய்ய கூடாது என்பது பல நீதிபதிகளின் கருத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சீவ் கன்னாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வழங்குவதில் தவறில்லை என்றாலும் அவர் காத்திருக்க கால அவகாசம் உள்ளது, அதேநேரம், சீனியாரிட்டிப்படி, ஏற்கனவே எடுத்த முடிவை கொலிஜியம் மாற்றக்கூடாது என்றும் தனது கடிதத்தில் கவுல் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications