Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஐ லவ் முஹம்மது' என்ற எழுத்து.. உ.பி.யில் பெரும் போராட்டங்கள்.. போலீஸ் தடியடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பரேலியில், வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பிறகு, போராட்டக்காரர்கள் கல் வீசியதாகக் கூறப்பட்டதை அடுத்து, போலீசார் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். 'ஐ லவ் முஹம்மது' (I Love Muhammad) என்ற சுவரொட்டி விவகாரம் தொடர்பாக சில வாரங்களுக்கு முன் தொடங்கிய பிரச்சனையின் அடுத்த கட்டமாக இது நடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, உள்ளூர் மதகுருவும், இத்தேஹத்-இ-மில்லத் கவுன்சிலின் தலைவருமான மவுலானா தௌகீர் ரசா, 'ஐ லவ் முஹம்மது' பிரச்சாரத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். இதன் காரணமாக பரேலியின் இஸ்லாமியா மைதானம் அருகே ஏராளமானோர் திரண்டனர்.

செப்டம்பர் 4 அன்று கான்பூரில் 'ஐ லவ் முஹம்மது’ சுவரொட்டி இருந்த ஒரு கூடாரத்தை (Tent) போலீசார் அகற்றிய பிறகு, 9 பேர் மீதும், அடையாளம் தெரியாத 15 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு நாடு முழுவதும் இதுபோன்ற பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் கூடியது. சிலர் ஆட்சேபணைக்குரிய கோஷங்களை எழுப்பியதால் கூட்டம் மேலும் பெரிதானது. பின்னர், போராட்டக்காரர்களில் சிலர் போலீசார் மீது கல் வீசியதாகக் சொல்லப்பட்டது. இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

உயர் அதிகாரிகள் இந்த நிலைமையைக் கவனித்து வருகின்றனர். மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரேலி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சரி, இந்த 'ஐ லவ் முஹம்மது’ விவகாரம் எப்படி தொடங்கியது?

இந்த விவகாரம் செப்டம்பர் 4 அன்று கான்பூரில் நடந்த ஈத்-இ-மிலாத்-உன்-நபி ஊர்வலத்தின்போது ஆரம்பித்தது. அப்போது, ஒரு கூடாரத்தில் 'ஐ லவ் முஹம்மது’ என்ற சுவரொட்டி வைக்கப்பட்டிருந்தது. பல சமூகத்தினர் வசிக்கும் ஒரு பகுதியில் இந்த விளம்பரப் பலகை வேண்டுமென்றே நிறுவப்பட்டதாக உள்ளூர் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விளம்பரப் பலகை, ராம் நவமி போன்ற இந்துப் பண்டிகைகள் வழக்கமாக கொண்டாடப்படும் பகுதியில்தான் வேண்டுமென்றே வைக்கப்பட்டுள்ளது என உள்ளூர் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. இதன் மூலம் இரு சமூகத்தினருக்கும் இடையே சண்டையைத் தூண்டிவிடுவதாக அவர்கள் கூறினர்.

தங்கள் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதாக இந்துக்கள் தெரிவித்தனர். அதேசமயம், இறைத்தூதர் மீதான அன்பை வெளிப்படுத்தியதற்காகத் தாங்கள் குறிவைக்கப்படுவதாக முஸ்லிம்கள் கூறினர். விரைவிலேயே, சமூக வலைத்தளங்களில் #ILoveMuhammad என்ற ஹேஷ்டேக் வேகமாகப் பரவியது.

செப்டம்பர் 9 அன்று, கான்பூர் போலீசார், மரபுக்கு மாறாக கூடாரத்தை அகற்றி வேறு இடத்தில் வைத்ததாகக் கூறி 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த முதல் தகவல் அறிக்கை, சாலையில் கூடாரம் அமைத்த நடைமுறைக்கு எதிரானது என்றும், சுவரொட்டிக்கு எதிரானது அல்ல என்றும் போலீசார் விளக்கினர்.

ஹைதராபாத் எம்.பி.யும், AIMIM தலைவருமான அசாதுதீன் ஓவைசி இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார். அவர், "யாராவது 'ஐ லவ் யூ' என்று சொன்னால் என்ன தவறு? 'லவ்' என்று எழுதுவதில் என்ன பிரச்சனை? இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு என்ன செய்தியை அனுப்ப விரும்புகிறீர்கள்?

"ஐ லவ் மகாதேவ்" என்று சொல்வதில் என்ன பிரச்சனை? அதுவும் செய்யப்பட வேண்டும், அது அவர்களின் நம்பிக்கை. இது முஸ்லிம்களை சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கும் ஒரு வழி" என்று அவர் மேலும் கூறினார்.

பல மாநிலங்களுக்குப் பரவிய போராட்டங்கள்: மும்பையின் மால்வானியில், இந்த வார தொடக்கத்தில் மதகுருமார்களும் மதத் தலைவர்களும் உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் பதிவு செய்தனர்.

சுவரொட்டிகளை அகற்றியும், வழக்குப்பதிவு செய்தும் அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதாகவும், அதே சமயம் இந்து அமைப்புகள் எதிர்ப்புப் பிரச்சாரங்களை நடத்த அனுமதிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

வியாழக்கிழமை அன்று, குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சமூக ஊடகங்களில் வந்த ஆட்சேபனைக்குரிய ஒரு பதிவு காரணமாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் பல கடைகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தியதுடன் கற்களையும் வீசினர்.

புதன்கிழமை இரவு நடந்த மோதல் மற்றும் கலவரம் தொடர்பாக சுமார் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தத் தாக்குதலில் நான்கு கடைகளும், ஐந்து முதல் ஆறு வாகனங்களும் சேதமடைந்தன.

செவ்வாய்க்கிழமை இரவு கர்நாடகாவின் தாவணகெரேயில் 'ஐ லவ் முகமது' என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கல் வீச்சு நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ், மகாராஜ்கஞ்ச், லக்னோ மற்றும் கௌசாம்பி ஆகிய இடங்களிலும் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

"ஐ லவ் மகாதேவ்" எதிர்வினை: பல வாரங்களாக நீடித்த சர்ச்சைக்குப் பிறகு, வாரணாசியில் ஒரு எதிர்ப்புப் பிரச்சாரம் தொடங்கியது. மதத் தலைவர்கள் "ஐ லவ் மகாதேவ்" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வீதிகளில் திரண்டனர்.

ஜகத்குரு சங்கராச்சாரியார் நரேந்திரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 'ஐ லவ் முஹம்மது' இயக்கத்தின் பின்னணியில் இருப்பவர்கள் 'பக்தி என்ற போர்வையில் நாட்டை அழிப்பதாக' குற்றம் சாட்டப்பட்டது. அரசாங்கங்களை நிலைத்தன்மையற்றதாக்கவும், சமூகத்தைப் பிரித்தாளவும் சதித் திட்டங்கள் தீட்டப்படுவதாக அவரும், மற்ற தலைவர்களும் குற்றம் சாட்டினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+