அங்கிட்டு மமதா வெளுக்க இங்கிட்டு குலாம் நபி ஆசாத் போட்டு தாக்க.. எவ்வளவு அடியைத்தான் தாங்கும் காங்.?
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 300 எம்.பிக்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ, நாங்கள் இல்லாமல் எந்த ஒரு அணியும் எதையும் சாதிக்க முடியாது என்கின்றனர்.
அத்துடன் மமதா பானர்ஜியை பாஜகவின் பி டீம் என முத்திரை குத்துவதிலும் தீவிரமாக இருக்கின்றனர். மமதா பானர்ஜி கள யதார்த்தத்தில் பேசுகிறார்; காங்கிரஸோ இன்னமும் பெரிய கட்சி நினைப்பில் பேசிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

காங். வெல்ல முடியாது
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற காங். நிர்வாகிகள் கூட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை. 300 எம்.பிக்களைப் பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நான் நினைக்கவில்லை.

370வது பிரிவு வழக்கு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல முறை பேசி இருக்கிறேன். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. என் கையில் எதுவுமே இல்லை. ஜம்மு காஷ்மீர் முதல்வர் வேட்பாளர் என்பதெல்லாம் இப்போது அர்த்தமற்றது. நமது நிலத்தையும் வேலைவாய்ப்புகளையும் பாதுகாப்பதுதான் மிக முக்கியம். அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எப்போது தீர்ப்பு வழங்கும் எனவும் தெரியவில்லை. அதற்காக ஜம்மு காஷ்மீர் மக்களின் நிலமும் வேலைவாய்ப்பும் வெளிமாநிலத்தவர் வசமாக அனுமதிக்க முடியாது.

தேர்தல் நடத்த கோரிக்கை
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

கலகக் குரல் குலாம் நபி ஆசாத்
370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அம்மாநில முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். இதனால் காங்கிரஸில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி மீண்டும் வழங்கப்படவும் இல்லை. ராஜ்யசபாவில் இருந்து குலாம்நபி ஆசாத் ஓய்வு பெற்ற போது காங்கிரசார் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத்துக்கு புகழாரம் சூட்டி உருக்கமாக பேசியிருந்தார். இதனால் பாஜக பக்கம் குலாம்நபி ஆசாத் தாவக் கூடும் என்கிற பேச்சுகள் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications