ஒரு வருஷமாச்சு.. காங். தலைவர் தேர்தலே நடத்தலை.. இடைக்கால தலைவராகவே நீடிக்கப் போகும் சோனியா
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தல் நடைபெறாத நிலையில் அக்கட்சியின் இடைக்கால தலைவராகவே சோனியா காந்தியே நீடிப்பார் என்கிற அறிவிப்பு வெளியாக உள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார்.

கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் மட்டும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த போதும் ராகுல் ஏற்கவில்லை.
இதனால் வேறுவழியே இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியை, காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்தது. கடந்த ஓரான்டு காலமாக சோனியா காந்தி, இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பல்வேறு மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்து ஓராண்டாகிவிட்டது. இன்னமும் கட்சிக்கான தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போதைய இடைக்கால தலைவரான சோனியா காந்தியே, தொடர்ந்து இந்த பதவியில் நீடிப்பார் என்கிற அறிவிப்பை காங்கிரஸ் காரிய கமிட்டி நிர்வாகிகள் விரைவில் வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications