உச்சநீதிமன்றம் நிபந்தனைகளால்தான் ராஜினாமா நாடகமாடும் கெஜ்ரிவால்..விளாசும் காங்கிரஸ், பாஜக, ஜேடியூ!
டெல்லி: உச்சநீதிமன்றம் விதித்த கடுமையான நிபந்தனைகளால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுவதாக காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்தியாவிலேயே முதல்வர் இருக்கையில் அமருவதற்கு எச்சரிக்கை விடுத்து ஜாமீன் வழங்கப்பட்டவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் அந்த கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுதலையான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினரிடையே உரையாற்றினார்.

அப்போது, ஆம் ஆத்மி கட்சியை உடைத்து டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக கனவு கண்டது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முடியவில்லை. அதனால் என்னுடைய தைரியத்தைத் தகர்க்க என்னை சிறைக்கு அனுப்பினர். ஆங்கிலேயர் ஆட்சியைவிட கொடூரமான பாஜக ஆட்சி. அடுத்த 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். டெல்லி சட்டசபைக்கு முன்கூட்டியே நவம்பரில் மகாராஷ்டிரா மாநில சட்டசபையுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும். டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறாமல் போனால் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவர். மக்களிடம் சென்று மக்களின் தீர்ப்பைப் பெற்றுதான் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித், அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுகிறார். உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனால் அவரால் முதல்வர் இருக்கையில் அமரவோ, கோப்புகளில் கையெழுத்திடவோ முடியாது. இதனால்தான் ராஜினாமா செய்வதாக அறிவிக்கிறார் என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நீரஜ்குமாரும் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நீரஜ்குமார் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதனால்தான் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றார்.
பாஜக தலைவர்கள் பலரும் இது கெஜ்ரிவாலின் விளம்பர ஸ்டண்ட் என விமர்சித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ஆம் ஆத்மி கட்சி ஒரு ஊழல் கட்சி என நாடு அறிந்துள்ளது. இழந்து விட்ட செல்வாக்கை பெற ஆம் ஆத்மி கட்சி முயற்சிக்கிறது. இதனால்தான் முதல்வர் பதவி ராஜினாமா நாடகம் நடக்கிறது என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications